Sunday 20 March 2016

நுரையீரல்!!!.......இது ராஜ உறுப்புக்களின் ஆயுளை நிர்ணயக்கின்றது!!! எவ்வாறு??



நாம் பருகும் நீர் மிக சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறோம்? சாப்பிடும்  உணவு சத்தானதா, ஆரோக்கியமானதா, கலப்படமற்றதா, இயற்கையானதா என்று தேடி தேடி ஆராய்கிறோம்? ஆனால், நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு தீங்கானது, அதில் கலந்திருக்கும் நச்சை வெளியேற்ற நம் நுரையீரல் எவ்வளவு சிரமப்படுகின்றது என்பதை நாம் பெரும்பாலும் சிந்தித்து பார்ப்பதில்லை. இங்கு நுரையீரலின்  சிறப்பை தெரிந்துக் கொள்வதர்க்காகவே இந்தச் சிறிய கட்டுரை.

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் தூசு, குப்பை, செல்போன் அலைவரிசை, டிவி அலைவரிசை, சேட்டிலைட் அலைவரிசை, காற்று சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களும் வைரஸ், பாக்டீரியா மற்றும் அணைத்து பொருள்களும் உள்ளன. மூக்கின் வழியாக உள்ளே செல்லும் காற்று நுறையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் காற்றிலுள்ள காற்று சம்பந்தப்பட்ட பொருள்களான ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற பொருள்களை எடுத்து நுரையீரல் இரத்தம் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் செல்லும் நல்ல காற்று, கெட்ட காற்றாக மாறி வெளியே தள்ளுகிறது. உதாரணமாக, ஆக்ஸிஜன் ஒரு செல்லுக்குள் செல்லும் பொழுது கார்பன்-டைஆக்சைடு ஆக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. உபயோகிக்கப்பட்ட காற்று, இரத்தம் வழியாக மீண்டும் நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் மூக்கு என்ற பாதை வழியாக வெளியே செல்கிறது.  எனவே, நுரையீரல் என்பது உடலிலுள்ள அணைத்து செல்களுக்கும் நல்ல காற்று என்ற உணவை உள்ளே  செலுத்தி கெட்ட காற்றை மூக்கின் வழியாக வெளியே தள்ளுகிறது.

நுரையீரல்களின் செயல்பாடுகள்:
1) ஆக்ஸிஜனை செல் திசுக்களுக்கு தருவதும் மற்றும் கரிய அமில  வாயுவினை திசுக்களில் இருந்து வெளியேற்றுவதும்.
2)  வாயு பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துதல் மூலம் உடம்பில் தட்பவெப்ப நிலையினை சமன் செய்கிறது. (அதிக வெப்பத்தை காற்றில் வெளியிடுவது மூலம்)
3)     இரத்த ஓட்டத்திற்கு உதவியாக இருத்தல் மற்றும் இரத்தத்தில் உள்ள PH-(காரத்தன்மை) சமநிலைப்படுத்துகிறது.
4)    இதய துடிப்பிற்கும், இதயத்தில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உதவியாக இருத்தல் மற்றும் உடலில் நீர் அளவினை சமன்படுத்துகிறது.

அடுத்து, நுரையீரலின் மூலம் பெறப்படும் சுவாசம் -- சுவாச முறை என்பது உடம்பில் உள்ள செல் திசுக்களுக்கும் மற்றும் வெளி சுற்று சூழ்நிலைகளுக்கும் இடையே ஏற்படும் காற்றுகளின்-வாயுக்களின் பரிமாற்றம் ஆகும். ஆக்ஸிஜனை உடல் திசுக்களுக்கு செலுத்தியும் கரிய அமில வாயுவை வெளியேற்றும் நிகழ்வு, சுவாச முறையினால் மட்டுமே நடைபெறுகிறது. சுவாச முறை பல வகைப்பட்டாலும் வயீற்று சுவாசம் மற்றும் மார்புச் சுவாசம் மிக முக்கியனமானது.

வயீற்றுச் சுவாசம் அல்லது ஆழ்ந்த சுவாசம்
உதரவிதானம் முழுவதுமாக சுருங்குவதால் வயீற்றுச் சுவர் வெளிநோக்கி அசைகிறது. இவ்வகைச் சுவாசத்தை குழந்தைகளிடம் காணலாம். ஒரு அறுவை சிகிச்சை அல்லது பிரசவத்திற்க்குப் பின்னர் அதை ஒரு நல்ல உடற்பயிற்சியாகக் கொள்ளலாம்.

மார்புச் சுவாசம்
வயிற்றுச் சுவர் சிறிதளவு அசைவது அல்லது சிறிது கூட அசையாமல் மார்பு மட்டும் அசைந்து நடைபெறுமானால் அது மார்புச் சுவாசம் ஆகும். பொதுவாக எப்போதும் நடைபெறும் சுவாசம் இவ்விரண்டு வகைகளும் கலந்த வகையாகும்.

சாதாரணமாக, ஒரு நிமிடத்திற்குப் பதினெட்டு அல்லது இருபது முறை சுவாசம் நிகழ்கிறது. குழந்தைகள் இன்னும் வேகமாகச் சுவாசிக்கின்றன. குழந்தையின் தேவைகளுக்கேற்ப சுவாசத்தின் வேகத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். மூளையின் அடிப்புறத்தில் உள்ள சுவாச மைய என்னும் ஒரு தனி நரம்பு மையத்தின் மூலம் சுவாசத்தின் ஆழமும், வேகமும் கட்டுபடுத்தப்படுகின்றன. இரத்த ஓட்டத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு பற்றிய செய்திகள் இந்த மையத்திற்கு வந்துசேருகின்றன. எடுத்துக்காட்டாக உடற்பயிற்சியின்போது தசையினால் அதிகமான கழிவு உண்டாக்கப்படுகிறது. இந்தச் செய்கையின் பயனாக சுவாச மையம் சுவாசத் தசைகளை மேலும் அதிகமாகச் செயல்பபடும்படியாக நரம்புகளின் மூலமாக ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக உடற்பற்சியின்போது நாம் மிக வேகமாகவும், ஆழ்ந்தும் சுவாசிக்கிறோம். உறக்கத்தின்போது உடல் ஓய்வாக இருப்பதனால் குறைவாகவே ஆக்சிஜன் தேவைப்படுகிறது, ஆகவே சுவாசம் மெதுவாக நடைபெறுகிறது.

விடியற்காலை 3  மணி முதல்  5 மணி வரை.......நுரையீரலின் நேரம்.  இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து, காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா. நோயாளிகள் இந்த நேரத்தில்தான் மிகவும் சிரமப்படுவார்கள்.
அடுத்து, மிக முக்கியமாக, நுரையீரல்கள் தான் குழந்தை பிறந்ததும் இயக்கம் பெறக்கூடிய ஒரே உறுப்பாகும். அதாவது, உயிரோட்டத்திற்கு உயிர் கொடுக்கக்கூடிய உறுப்பு என்றால் மிகையாகாது. நுரையீரல்கள் வாயு மண்டலத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், காற்று எனும் மூலப்பொருளுக்கு உரிய உறுப்பாக இருக்கிறது.   சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் பிராண சக்தியைக் கொண்டுள்ளது. ஆழமான, சீரான சுவாசத்தின் மூலம் நிறைய பிராண சக்தி உள்ளே சேருகிறது.  அது நமது உடலுக்குள் வளமான சூழ்நிலையை உண்டாக்குகிறது. இந்த வளமைதான் வாழ்வதற்க்கான தூண்டுதலையும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் உண்டாக்குகிறது.

மேலும், மனதளவில் ஒருவருக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டால், அவருக்குள் ஒரு வெறுமை உணர்வு உண்டாகி, வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும். என்ன பணி செய்தாலும், யாருடன் பழகினாலும், அதில் திருப்தி இருக்காது. மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். தனக்கு நல்லது செய்பவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார். அவரைப் பற்றிக் கேவலமாக மற்றவர்களிடம் விமர்சிப்பார். தன் மீதே கூட அவருக்கு மரியாதை இருக்காது. ‘நான் ஒரு முட்டாள்’ நான் ஒரு முண்டம்’ நான் ஒரு வீணாப் போனவன்’ என்று தன்னைப் பற்றிப் தானே விமர்சனம் செய்து கொள்வார். இது மனரீதியாக உணர்வு புலன்களின் பாதிப்பால் உண்டாகும் நோய்கள். இதற்கு, புதன் கிரகமே காரணமாகும். இவற்றைப் பற்றி இறுதி பகுதியில் மேற்க்கோளோடு கூறுகிறேன்.  

மேலும் நுரையீரலில் உள்ள பிரச்சனைக் காரணமாக உடம்பில் ஒரு பகுதியான தோலில் பாதிப்பு உண்டாகும். இந்தத் தோல் தான் நமக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையில் உள்ள வரையறை. இந்த வரையறைக்குள் இருந்து கொண்டுதான் நாம் சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொள்கிறோம். ஆகவே, சுற்றுப்புறச் சூழ்நிலை, நமக்கு ஒவ்வாமையை (அலர்ஜியை) உண்டு பண்ணினால், அது நமது நுரையீரலை மட்டுமன்றி தோலையும் பாதித்து, தோல் வியாதிகளை உண்டாக்கும்.

நுரையீரல் பலவீனத்தால், சுற்றுப்புறச் சூழ்நிலை மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட அலர்ஜியை உண்டு பண்ணுவார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்ள முடியாது. என் வீட்டு வாசலில் எதுக்கு வண்டியை நிறுத்துறே! எதுக்குக் குப்பையைக் கொட்டுறே! என்று அடிக்கடிச் சண்டைக்கு போவார்கள். பிறகு தோலை ஆரோக்கியமாக பராமரிக்கும் எண்ணம் கூட இல்லாமல் இருக்கும். தொடர்ந்து ஒரு வாரம் கூட குளிக்க மாட்டார்கள். அழுக்கான ஆடை அணிந்திருப்பார்கள், தாடியும், மீசையுமாக அலைவார்கள்.

பஞ்ச பூதத்தில் உள்ள காற்று மூலபொருள் உடலில் குறையும்போது நுரையீரலில் என்ன சிக்கல்கள் உருவாகும் என்பதை பார்ப்போம்.  வெளிக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியாது, போதுமான சுவாசம் குறையும்போது....உணர்வுகள் குறையும், உயிரோட்டமும் குறைகிறது. எனவே, கைகள் உணர்விழந்த நிலை ஏற்படும், சோர்ந்து போய்விட்டது போன்ற கஷ்டத்தை உணர்வார்கள். கை விரல்களில் உறுதி குலைந்து, நடுக்கம் ஏற்படும் முழங்கையில், தோள்பட்டைகளில் கைகளை அசைக்கும்போது, அந்த மூட்டுகளில் சத்தம் ஏற்படுவதை உணர்வார்கள். அடிக்கடி, நெட்டி முறிக்க வேண்டி இருக்கும். கைகளிலும், நெஞ்சு தோள் புறங்களிலும், முகத்திலும் வெண்திட்டுகள் தோன்றும்.

எப்போது பஞ்ச பூதத்தில் உள்ள காற்று மூலபொருள் உடலில் குறைகிறதோ, காற்றிலிருந்து உருவாகிற நீர் சக்தியும் உடலில் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது உருவாகும் நோய்களாவது --- விரல் மூட்டுகளின் மேல் பகுதியில் தோலில் கருப்பு நிறம் படரும். முகத்திலும், தோள்பட்டையிலும், நெஞ்சிலும் தென்படும். முழங்கையில் நீர்த்தேக்கத்தின் காரணமாக, மூட்டின் பின்புறம் கருப்பு படர ஆரம்பிக்கும். முழங்கை வலியும், தோள்பட்டை வலியும், தாடை வலி ஏற்படுவதையும் தொண்டையில் TONSIL, வீக்கம் அடைவதையும் அவற்றில் வலி ஏற்படுவதையும் தடுக்க முடியாது. எந்த நேரத்திலும் தாடை உட்புறத்தில் இருக்கக்கூடிய பற்களிலும் வலி ஏற்படலாம். பற்களில் கருப்பு நிறம் படியும். அதைப் பூச்சிப் பற்றி இருக்கிறது என்று தவறாக கூறுவார்கள். அடுத்து இதே நீர்சக்தி பற்றாகுறையால் உள்ளங்கால்களில் அரிப்புடன் கூடிய வலி ஏற்படலாம். அங்கு கருப்பு படர்ந்து நீர்சக்தி தேக்கத்தின் காரணமாக, கடினமாகி கால் ஆணியாக மாறும். அடுத்து கணுக்காலில் பகுதியில், கருப்பு நிறம் படர்ந்து அலர்ஜி ஏற்பட்டு அரிப்பும், நீருமாக வடியலாம். அங்கு புண்கள் ஏற்பட்டு, சீழ் பிடிக்கவும் ஆரம்பிக்கும். காலின் பின்புறம் நீர்சக்தித் தேக்கத்தின் காரணமாக, கருநிறம் படிந்து, ஆடுசதைகள், முழங்காலின் பின்புறம், தொடையின் உள்பகுதி ஆகியவற்றிலும் கருநிறம் படரும். பல சமயங்களில் கொக்கிப் போட்டு இழுப்பது போன்ற வலியும் ஏற்பட்டு தாங்க முடியாத வேதனைக்கும் ஆளாக நேரிடும். தொடையின் உட்பகுதியினுள் வலி ஆரம்பித்து, கணுக்கால் வரையில் பரவும், இந்த வலியைத் தாங்க முடியாது. பொதுவாக, கருமை படரக்கூடிய இரவு வேளைகளில் தூக்கத்தில் நடுஇரவில் கெண்டைக்கால்களிலும், ஆடுசதைகளிலும் திடிரென வலி ஏற்படும். அதாவது காற்று சக்தி அதிகமாக இந்த இடத்தைத் தாக்கும்போது வலி ஏற்படுகிறது. அதாவது, மின்விசிறிக்குக் கீழே படுத்தத் தூங்கும்போது, வலி ஏற்படுகிறது. அதிகமான காற்று வெளிபுறத்திலிருந்து வீசினாலும் இந்த வலி ஏற்பட்டு விடும். எனவே, பெரும்பாலும் தூக்கத்தில் இந்த வலி ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, காலில் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவார்கள். இந்த இடத்தில் பாரமாகவும், மதமதப்பாகவும், உணர்வார்கள். அடுத்து, நுரையீரினால் இதயம் எவ்வாறு பாதிப்படையும் என்பதைப் பார்க்கலாம்.

நுரையீரலும், இதயமும் கணவன், மனைவிப் போல் ஒன்றாக இணைந்து பிணைந்துதான்  செயல்படும். அதாவது, ஒருவருக்கு நுரையீரலில் நீண்ட காலமாக நோய் நீடித்தால் இதயத்திலும் நுரையீரலில் உள்ள நோயின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அதைப்போல் இதயத்தில் உள்ள நோயும் நுரையீரலிலும் பிரதிபலிக்கும். இதய நோய் அல்லது நெஞ்சு வலி உள்ளவருக்கு பொதுவாக சுவாசக் கோளாறும், சளித் தொந்தரவுகளும், குறிப்பாக விடியற்காலையில் சுமார் 3 மணி முதல் 5 மணி வரை மூச்சு விடுவதில் மிகுந்த சிரமமும் ஏற்படும், மேலும், நாக்கு குழறும், வியர்வை அதிகரித்து மயக்கம் உண்டாகும். கை, கால்களில் சக்தியே இருக்காது. இவை அனைத்தும் நுரையீரலில் உள்ள கோளாறாகும். இதைப்போலவே, நுரையீரலில் பிரச்சனை உள்ளவர்கள் வேகமாக நடப்பதற்கும், மாடிப்படி ஏறுவதற்கும் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாவார்கள். மேலும், சிறிது வேலை செய்தாலும் வேர்த்து விறுவிறுத்துப் போவார்கள். குறிப்பாக, காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மனதில் இனம்புரியாத கவலைக்குள்ளாகி சிரமபடுவார்கள். உடல் ரீதியாகவும் மிகவும் களைப்படைந்து அசதிக்குள்ளாவார்கள், இது இதயக் கோளாரினால் உண்டாகும் விளைவுகள்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நுரையீரலை ராகுவோடு மட்டும் ஒப்பிட்டால் அது சிறக்காது அல்லது முறையாகாது என்பதில் ஐயமில்லை.  இங்கு, மேலோட்டமாக பார்த்து நுரையீரலை ராகுவோடு மட்டும் ஒப்பிடாமல் புதனோடும் சேர்த்து ஒப்பிட்டல்தான் நுரையீரலின் சிறப்புகள் நன்கு விளங்கும். அதாவது, நுரையீரலை புதனோடும் அதிலுள்ள சுவாசத்தை ராகுவோடு பிரித்து ஒப்பிடுவதுதான் சாலச்சிறந்ததாகும்.

புதன் நரம்பு மண்டலத்திற்கும், உணர்வு புலன்களுக்கும், இதயத்திற்கும் இரத்தம் கொண்டுச் செல்லும் இரத்த நாளங்களுக்கும் காரகம் வகிப்பவர். இதயமும், நுரையீரலும் ஒன்று சேர்ந்து தான் இயங்கும் என்பதை சற்று முன் பார்த்தோம், அதாவது நம் உடலில் உள்ள நரம்புகளின் துணைக்கொண்டுதான் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது கட்டுபடுத்தியோ அதனதன் தேவைக்கேற்ப இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் உடலில் உள்ள எந்த உறுப்பும் தன்னிச்சையாக இயங்க முடியாது. ராஜ உறுப்புக்கள் என்று கூறப்படும் இதயம், பெரிகார்டியம், நுரையீரல், சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல், வயீறு ஆகிய உறுப்புக்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதற்கு நரம்பு மண்டலமே மூலகாரணமாகும். மூளையின் செயல்பாடு என்பது இந்த ராஜ உறுப்புக்களில் நிகழும் பிரதிபலிப்பு மட்டுமே.

ராஜ உறுப்புக்களின் ஒன்றியியைந்த செயல்பாட்டுக்கு நரம்பு மண்டலம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் நுரையீரலின் உள்ள காற்றுச்சக்தி என்கிற பிராண வாயுச்சக்தி உடலில் உள்ள ராஜ உறுப்புக்களின் செயல்பாட்டை மட்டுமன்றி அதன் உறுதி தன்மையையும், ஆயுளையும் நிர்ணயிக்கின்ற வல்லமை படைத்தது என்றால் அது மிகையாகாது. அடுத்து, புதனில் உள்ள உணர்வு புலன்களால் கெடுதல் ஏற்படுமாயின் உடலில் எவ்வித மாற்றங்கள் உருவாகும் என்பதையும் நாம் மேலே தெளிவாக கூறியுள்ளோம்.


இங்கு, நுரையீரலின் செயல்பாட்டை புதனோடு, ராகுவையும் தொடர்பு படுத்துவதால், 3ம் பாவத்தையும்,  4ம் பாவத்தையும் இணைத்துத் தான் பார்க்க வேண்டும் என்பதை அன்பர்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

3 comments:

  1. Wah ... Very descriptive pages of article people nowadays sleep with less fresh air with lot if articles in bed room with cellbph Comouter dirty clothes etc each item exit bad energy wounderful sir if u can post with eg horoscope s articles will b more good

    ReplyDelete
  2. Wah ... Very descriptive pages of article people nowadays sleep with less fresh air with lot if articles in bed room with cellbph Comouter dirty clothes etc each item exit bad energy wounderful sir if u can post with eg horoscope s articles will b more good

    ReplyDelete