Friday 4 March 2016

மூட்டுவலிக்கும், முழங்கால் வலிக்கும், வலி நிவாரண மருந்துகள் தான் தீர்வா?


மூட்டுவலி!!! முழங்கால் வலி!!!  இது வயது வித்தியாசம் இல்லாமல் அணைத்து வயதினரையும் குறிப்பாக பெண்களையும் வாட்டி வதைக்கின்றது.  இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் வலி நிவாரணங்களையும், OILMENT மற்றும் சில வகை இயற்கை கை வைத்தியங்களையும் முயன்று பார்த்தும் வலிகளை நிரந்திரமாக குணமாக்கி கொள்ளமுடிவதில்லை. இதற்கு என்னதான் தீர்வு? அதை கண்டுபிடிப்பதற்க்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, வலி என்றால் என்ன? நம் மருத்துவர்கள் இதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடனவைகள் யாவை?


1)   மூட்டு தேய்மானம்,
2)   கால்சியம் குறைபாடு,
3)   அதிக உடல் எடை
4)   இரண்டு மூட்டுக்கிடையில் உள்ள LUBRICATION குறைபாடு
5)   மூட்டில் ஏற்படும் உள்காயங்கள்,
6)   ருமடாய்ட் ஆர்த்ரடிஸ்,
7)   ஆஸ்டியோ ஆர்த்ரடிஸ்,
8)   தொற்று கிருமிகளால் உண்டாகும் பாதிப்பு...... இன்னும் பல

பொதுவாக, வலிக்காக நாம் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணம் எவ்வகையில் வேலை செய்கிறது –- நோயை குணப்படுத்துக்கிறதா அல்லது வலியை மட்டும் குறைக்கிறதா? உதாரணமாக, நம் கால் மூட்டில் வலி ஏற்படுகிறது என்று வைத்து கொள்வோம். வலி என்பது மூட்டில் ஏற்படும் ஆற்றல் பற்றாக்குறையை உடல் பூர்த்தி செய்ய முயலும்போதோ அல்லது அப்பகுதியில் உள்ள கழிவுகளை நீக்குவதற்க்கான முயற்சியிலோ ஏற்படுகிறது.  இப்படி வலி ஏற்படும்போது உடனடியாக அதைப் போக்குவதற்காக நாம் மருந்து வலி நிவாரணிகளின் உதவியை நாடுகிறோம்.  மூட்டு வலிக்காக நாம் சாப்பிடும் மருந்து என்ன செய்கிறது? இரைப்பையில் கரைந்து, நேராக மூட்டிற்குச் சென்று அங்கு ஏற்பட்டுருக்கும் பிரச்னையைப் போக்கி விடுவதில்லை. வலி நம் காலின் வலது மூட்டில் என்றால், உள்ளே போகும் வலி நிவாரணம் இடது மூட்டிற்குப் போகாமல் வலது பக்கம் போய் நோயை விரட்டுகிறதா? அல்லது நாம் என்றாவது நமக்குள்ளேயே கேள்வி எழுப்பி இருப்போமா? அதாவது, மருந்து நேராக வலி இருக்கும் இடமாகிய வலது மூட்டிற்கு தான் செல்லும்மா? அல்லது திசை மாறி இடது மூட்டிற்கு  ஒரு வேலை செல்லும்மா? அல்லது சரிசமமாக மருந்து பகிர்ந்து அளிக்கும்மா?? என்றெல்லாம் கேள்வி நம் மனதில் ஒரு நாலாவது எழுந்திருக்குமா?  உண்மையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உடலுக்குள் செல்லும் வலி நிவாரண மருந்து, வலியை நமக்கு உணர்த்தும் நரம்புகளைத் தற்காலிகமாகத் தூங்க வைக்கிறது. அவ்வளவுதான், இந்த நரம்புகள் தூங்கினால் எப்படி வலி போகும்.

இந்த நரம்புகள் தான் உடலில் ஏற்படும் வலியை நமக்கு உணர்த்துகின்றன. வலி உடலில் இருந்து மறைவதற்க்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, வலிக்குக் காரணமான பிரச்னையைச் சரி செய்வது, இரண்டு, வலியை மூளைக்குக் கடத்தும் நரம்புகளை மரத்துப் போகச் செய்வது. நாம் வலி நிவாரண மருந்துகளைச் சாப்பிடும்போது, இவற்றில் எது நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது தானே?

வலி நிவாரண மருந்துகளின் விளைவால் உணர்ச்சி குறைந்து மரத்துப் போகின்றன வலி கடத்தும் நரம்புகள், மறுபடியும் சில மணி நேரங்களிலோ, சில நாட்களிலோ தன்னிலைக்குத் திரும்பும் போது உடலில் வலி தெரிகிறது. இப்போது நாம் மறுபடியும் வலி மறக்கும் மருந்துகளைச் சாப்பிடுவோம். மறுபடியும் நரம்புகளின் தூக்கம், இப்படித்தான் நாம் வலிகளையும், வலிக்குக் காரணமான நோயையும் உடலிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.

சரி, உண்மையில் வலி எதனால் வருகின்றது, அதற்கு மூல காரணம் என்ன? அதை எப்படி இயற்கையான வழியில் வெளியேற்றுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்!!!

நம் உடலில் உள்ள கழிவுகள் முறையாக அவ்வப்போது உடலை விட்டு வெளியேறாமையே பல நோய்களுக்கு மூல காரணமாகின்றன. அதாவது, நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் கழிவுகள் உடலை விட்டு வெளியேற மறுக்கின்றன

பொதுவாகவே, உடலில் உள்ள கழிவுகள் மலம் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ அல்லது சளியின் மூலமாகவோ வெளியேறுகின்றன. ஆனால், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் இவற்றில் தடை ஏற்படுகின்றன. இவ்வாறு உடலில் தேங்கும் கழிவுகள்  வெப்ப வடிவமாகவோ அல்லது நீர், காற்று, திட வடிவமாகவோ இருக்கும். உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படும் போது மூட்டுக்களில் நீர்கழிவுகளில் தேக்கமடைகின்றன. நீர் தேங்கிய எலும்பு இணைப்புகள் வலியை ஏற்படுத்தும். இதைத்தான் கிராமங்களில் “நீர் தொந்தரவு” என்று கூறுவார்கள். இதே நீரானது தலையில் தேங்கும் போது SINUS” எனவும், மூட்டில் தேங்கும் போது ‘ருமடாய்ட்’  எனவும் பெயர் பெறுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் இயற்கை விதிமீறல்களால் நம் உடலில் கழிவுகள் தேங்குகின்றன. இந்த கழிவுகள் தசைகளுக்குள்ளும், எலும்புகளைக்குள்ளும் ஊடுருவிக்கொள்கிறது. நம் உடல் இயற்கையானது. இந்த கழிவுகளை எதிர்ப்பு சக்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தி சுகமடையச் செய்கிறது. இந்த சுகப்படுத்தும் நிகழ்வைத்தான் வலிகளாக உணர்கிறோம். அதாவது, தேக்கமடைந்த கழிவுகள் வெளியேறும் போது ஏற்படும் தொந்தரவுகளும், வலிகளும் தான் நோய்கள் என்று எண்ணிக்கொள்கிறோம்.  இது தவறான எண்ணம்.

அக்குபங்சர் மருத்துவம், சிறுநீரகத்தில் தான் மனித உயிர்சக்தி அமைந்திருப்பதாகக் கூறுகிறது.  தன் ஆயுளில் பெரும்பகுதியை கடந்த மனிதருக்கு சிறுநீரகத்தில் (KIDNEY) இருக்கும் உயிரின் தன்மையைக் குறிக்கும் விதமாக நிரந்தர மூட்டு வலிகளும், காதுகளின் கேட்கும் திறன் குறைகிறது. இதனால், மேலும் பாதிப்படையும் உறுப்புகள்,

1)      நீர் சுரப்புகள்,
2)      இனபெருக்க உறுப்புக்கள்,
3)      தலை முடி,
4)      நகங்கள்,
5)      எலும்புகள்,
6)      பற்கள்
7)      தொண்டை,
8)      குரல்,
9)      சிறுநீர்.......முதலியனவையாகும்.

சரி, ஜோதிடரீதியல் இதை எவ்வாறு அணுகலாம்.....உடலில் உள்ள கால்களை சனி கிரகத்தோடு ஒப்பிடலாம். கால்களில் ஏற்படும் அணைத்து வித தொந்தரவுகளுக்கும், வலிகளுக்கும் இவர் தான் காரணம். கால்களில் ஏற்படும் வலி மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அணைத்து விதமான வலிகளுக்கும் சனி மட்டுமே காரணமாகும்.

கால்களை ஏன் சனியோடு ஒப்பிடவேண்டும்........ சனி கிரகத்தில் உள்ள காரகங்கள் மற்ற கிரக காரகத்தோடு ஒப்பிடுகையில் சற்று முக்கியமற்றதாகவோ அல்லது மதிப்பு குறைந்ததாகவோ இருக்கிறது. இயற்கையாகவே,  சனி சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் சூரியனின் ஒளி சனிக்கு கிடைப்பதில்லை. எனவே, சனி இருட்டு நிறமாகவே இருக்கும். சனி காரகத்தில் உள்ள கரிய உலோகமாகிய இரும்பு, மிக்க கடினமானதாகவும் அதே நேரத்தில் கட்டுமான துறைக்கு இன்றியமையானதாக உள்ளபோதிலும் அல்லது கருப்பு தங்கம் என்றழைக்கப்படும் ‘நிலக்கரி’ யாகட்டும், சுத்தமான  தங்கத்தோடு (குரு காரகம்) ஒப்பிடுகையில் மிகவும் மதிப்பு குறைவே  என்பதை மறுக்க இயலாது.. 

இதேபோல், நம் உடலில் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படும் இதயம், கல்லீரல், சிறுநீரகம், வயீறு, நுரையீரல், மண்ணீரல் ஆகிய முக்கிய உறுப்புகள் நம் அடிவயிற்றுக்கு மேலேயே அமைந்துவிடும். ஆனால், அடிவயிற்றுக்கு கீழே உள்ள கால்களில் எந்த முக்கிய உறுப்புகள் இல்லாததால், கால்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை இழக்கின்றது. கடின உழைப்பாளிகள், ஒரே  மாதிரியான வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், சமுதாயத்தில் அனைவருக்கும் தெரியாத (இருட்டு) அடித்தட்டு மக்கள் ஆகியவர்கள்  அனைவரும் கால்களைக் மூலதனமாகக் கொண்டே கடினமாக உழைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு, உழைப்பிற்கு ஏற்ற வெகுமதியோ, நற்பெயரோ, சமுதாயத்தில் உரிய அங்கீகாரமோ   கிடைப்பதில்லை. நம் உடலில் உள்ள பெரும்பான்மையான பாரத்தை சுமக்கும் நம்  கால்கள் அதற்குரிய அந்தஸ்தினை பெறுவதில்லை.  இதைத் தான், நம் கால்களை, சனி கிரகத்தோடு ஒப்பிடுவது சாலச்சிறந்ததாகம்..

இதே போல், 11ம் பாவத்தையும்  இதனோடு இனணத்துப் பார்க்க வேண்டும். உடலில் உள்ள VITAMIN சக்தி முழுவதும் 11ம் பாவத்தில் தான் தேக்கி வைக்கப் பட்டிருக்கிறது.. உடலில் உள்ள VITAMIN சக்தி குறைபாட்டால் எலும்புகளிலும், மூட்டுகளிலும் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த வலியும், பலகீனமும் ஏற்படும். குறிப்பாக, கால்சியம் சத்து குறைவு ஏற்பட்டால் எலும்பின் உறுதி தன்மை பாதிப்புள்ளாகும். அது மட்டுமன்றி   பெண்களின் மாதவிடாய் காலங்களில் மூட்டுகளில் மிகுந்த வலியும், அசதியும் ஏற்படும். மேலும், இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பான்மையோர் VITAMIN சக்தி குறைபாட்டால் சிறுவயது முதற்கொண்டே கால்களில் ஸ்திர தன்மையை இழந்து மூட்டுகளில் நீர் சக்தியின் சமநிலை பாதிக்கப்பட்டு கால்களில் அவ்வப்போது ஒரு வித உஷ்ணதன்மை பரவி பலம் குன்றியவர்களாய் ஆகின்றனர். இதனால், அவர்கள் சிறிது விளையாடினாலே மிகவும் கலைப்பாகின்றனர்.


ஆகையால், முழங்கால், மூட்டுவலி பிரச்சனைகளில் இருந்து ஒருவர் நிரந்திரமாக  விடுபட வேண்டுமென்றால் சனி கிரகமும், 11ம் பாவமும் அகம் சார்ந்த பாவங்களை தொடர்புக் கொண்டு, அதனுடைய தசையையே நடைபெறும்போது அதற்கு பக்கபலமாக புத்திகள் அமைய பெறுவோருக்கு வாழ்வில் நிரந்தர சுகம் கிடைக்கும் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

1 comment:

  1. How do I make money from playing games and earning
    These https://octcasino.com/ are septcasino.com the three most popular forms of gambling, and are explained in หารายได้เสริม a very https://deccasino.com/review/merit-casino/ concise and concise manner. The most common forms of gambling are: https://vannienailor4166blog.blogspot.com/

    ReplyDelete