Friday 26 February 2016

மலட்டு தன்மைக்கும், குழந்தையின்மைக்கும் சிறுநீரக உறுப்பு (KIDNEY) குறைபாடே??? ஏன்? ஏதற்கு? எப்படி?











குழந்தை பிறப்பிற்க்கான தாமதத்தை அல்லது மறுக்கபடுவதை ஆணுக்கோ / பெண்ணுக்கோ நவீன விஞ்ஞானமும், மருத்துவர்களும் எவ்வாறு பார்க்கின்றனர்., அதற்கான காரணங்களாக கூறப்படுபவைகள் யாவை.

1) முறையற்ற வாழ்க்கைமுறை ; 2) துரித உணவுகள் ; 3) மன அழுத்தம் ; 4)அதிக வேலைபளு ; 5) குறைந்த தூக்கம் ; 6) சர்க்கரை நோய் ; 7)போதிய-உடற்பயிற்சியின்மை; இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம்.....

சரி, மேலே குறிப்பிட்டவகைகளில் மட்டும் தான் உண்மையான காரணங்களா?. இல்லவே இல்லை.... நாம் வேறு சில கோணத்தில் புதிய ஆய்வுகளை மேற்க்கொள்ளலாம்.

பஞ்ச பூத தத்துவ ரீதியில் ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கோ அல்லது குழந்தையின்மைக்கோ எதைக் முக்கியக் காரணமாகக் குறிப்பிடுகிறது. பஞ்ச பூதத்தில் உள்ள “நீர்” மூலகத்தில் சிறுநீரகமும், மூத்திரபையும் உள்ளன. குறிப்பாக சிறுநீரகம் ஆண், பெண் இனவிருத்தி உறுப்புக்கள் மற்றும் அதற்க்குண்டான ஹார்மோன்கள், உயிரணுக்கள், கர்பப்பை, விந்துப்பை, சினைமுட்டை மற்றும் அட்ரீனலின் சுரப்பி ஆகியவற்றை தன் முழு கட்டுபாட்டில் வைத்துள்ளது. நாம் எவ்வாறெல்லாம் சிறுநீரகங்களின் உயிர்ச் சக்தியை சிதைக்கின்றோம் என்பதை பின்வருமாறு அறியலாம். 

முறையற்ற உணவுமுறை:
இப்பொழுதெல்லாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலை ‘ஸ்லிம்’ மாக,  ‘ட்ரிம்’ மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இளைஞர்களிடையே காணப்படுகிறது. இது அதிகமாகவும் வருகிறது. அதாவது வருத்திக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதாகும். குறிப்பாக பட்டினி கிடக்கிறார்கள். அதுவும் வளர்ந்து வரும் வயதில், நன்றாக வளரும் பருவம், முறையாக சாப்பிட வேண்டும். “பசி எடுக்கும் பொழுது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக் கூடாது” போன்ற உண்மைகளை சான்றோர்கள் அறிவார்கள். “வேளாவேலைக்கு சாப்பிடு“ என்று முதியவர்களும்  கூறுவார்கள். பசி எடுப்பதனுடைய பொருளானது “உடலினுடைய சக்தி நிலை குறைந்திருக்கிறது, இப்போது சக்தி தேவை” என்பதாகும். ஆக, ஜீரண சுரப்பு நீர்கள் வாயிலும், வயிற்றிலும் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது பசி உணர்வைத் தோற்றுவிக்கிறது. உணவை ஜீரணிக்கக் கூடிய இந்த ஜீரண நீர்கள் உணவு ஊட்டப்படாமல் தவிர்க்கப்படும் பொழுது, வயிற்றை அரிக்க ஆரம்பிக்கின்றன. வயிற்றில் எரிச்சல் உருவாகிறது. இந்த எரிச்சல் நாளைய புண்களுக்கும், அஜீரணதிற்க்கும், வாய்வு தொந்தரவுகளுக்கும் காரணமாக அமையும்.

இதன் காரணமாக மனதில் கவலையும், கோபமும் அதிகமாக வந்து வந்து போகும். இதனால் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும். உணவிலிருந்து எந்த உயிர்ச் சக்தியையும் முழுமையாக கிரகிக்க முடியாது. உணவின் ஜீரணத்திலிருந்து வெளியாகும் க்ளுகோஸ் (glucose) சர்க்கரை முறைகெட்டதாக இருக்கும். இந்த முறைகெட்ட க்ளுகோஸ் உடலுக்கு ஒவ்வாமையையும், அலர்ஜியையும் ஏற்படுத்தும். இந்த முறையற்ற ஜீரணத்தின் வாயிலாக உருவாகியுள்ள அந்தக் கெட்ட க்ளுகோஸானது சிறுநீரில் கழிவுகளாக வெளியேற்றப்படும்.

சிறுநீர் வழியாக வெளியேறக் கூடிய இந்த கெட்ட க்ளுகோஸானது சிறுநீரகங்களின் நுண்ணிய செல்களையும், சிறுநீரகங்களையும் பாதிக்கும். இந்த சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் பொழுதுதான்  ஆண்மைத் தன்மை கெடும், பெண்களுக்கு பெண்மைத் தன்மை பறிபோகக் கூடிய ஆரம்பம் இங்குதான்.

சிறுநீரகங்கள்  கெட்ட சக்திகளை மிக அதிகமாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது, அந்தக் கெட்ட கழிவுகளில் பெரும்பான்யானவைகள் சிறுநீரகங்களின் செல் அணுக்களில் தங்கி  விடுகின்றன. இதுதான் சிறுநீரகங்களின் செயல்திறனில் அவை உறுதியிழக்கும் காலகட்டமாகும்.

சிறுநீரகங்கள் உறுதியாக செயல்படும் போது, இரத்தமும் அதன் வழியாக சுற்று பெரும் அதே நேரம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலிருந்தும் அந்தக் கழிவுகளை எடுத்துக் கொண்டு அந்த சிறுநீரகங்களுக்கு வருகிறது. சிறுநீரகங்களின் முக்கியமான வேலை என்னவென்றால், ஒவ்வொரு அணுவிலிருந்து திரட்டிக் கொண்டு வரப்படும் அந்த இரத்தத்திலிருந்து உயிர்ச் சத்தைப் பிரித்து எடுக்கிறது. இந்த உயிர்ச் சத்துக்கள் ஆண் அணுவின் கருவாகவும்,, பெண் அணுவின் கருவாகவும், ஆண், பெண் இருவர் முறையே பிரித்தெடுக்கப்படுகின்றது. இவ்வதமாக, இரத்த ஓட்டத்திலிருந்து சிறுநீரகங்ககளால் பிரித்தெடுக்கப்பட்ட இந்த உயிர்ச் சத்துக்கள் ஆணுடைய விந்துபையை அடைகிறது. அவ்விதமாகவே, பெண்ணுடைய உயிர்ச் சத்தானது அதனுடைய சினைப்பையை அடைகிறது. அங்கு ஆண் அணுவாகவும், பெண் அணுவாகவும் முறையே உருவாகிறது. ஆக, எந்த அளவுக்கு சிறுநீரகங்கள் உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இரத்த ஓட்டத்திலிருந்து உயிர்ச் சக்தியானது பிரித்தெடுக்கப்படுகின்றது. இந்த அளவீட்டைப் பொறுத்துத்தான் ஆண் தன்மையும், பெண் தன்மையும், அளவு குறையும் பொழுது ஆண்மைக் குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படுகிறது.

கடுமையான உடற்பயிற்சி :
இன்று இளைஞர்கள் ‘ஜிம்’ போன்ற இடங்களுக்குச் சென்று கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடைய அட்ரீனலின் என்ற சுரப்பு நீர் மிக அதிகமாக தூண்டப்படுகிறது. இந்த சுரப்பிகளின் தூண்டுதலில் ஆண் தன்மையைக் கெடுக்கக் கூடிய ஹார்மோன்களும் வெகுவாக, அளவுக்கு மீறி சுரக்கின்றன. எனவே, இவர்களுடைய தசைகள் பெருத்து, கடின தன்மையை அடைகின்றன. எதிர்காலத்தில் இவர்களுடைய ஆண் தன்மை, பெண் தன்மை கேள்விக் குறியாக ஆகிவிடுகிறது. சாதரணமாக, ஆணுக்கு 60 வயது வரை ஆண் தன்மை நிலைத்திருக்கும், அதற்குப் பிறகு சற்று குறையலாம். அவ்விதமாகவே பெண்ணுக்கு 50 வயது வரை சாதரணமாக பெண் தன்மை நீடிக்கும், பின்னர் குறைந்து விடும். ஆனால், ‘ஜிம்’ போன்ற கடுமையான பயிற்சிகளைச் செய்யும் பொழுது, ஆண் தன்மையையும், பெண் தன்மையையும் கொடுக்கக்கூடிய ஹார்மோன்கள் வீணடிக்கபடுவதன் காரணமாக 35 முதல் 45 வயதுக்குள்ளாகவே அவர்களுடைய  வீரியம் குறைந்து போகும். பெண்ணாக இருப்பின் 4௦ வயது முடிவதற்குள்ளாகவே அவர்கள் இல்லற வாழ்க்கையில் இயலாதவர்களாக ஆகி விடுவார்கள்.

அட்ரீனலின் சுரப்பு நீர்::
அட்ரீனலின் என்ற சுரப்பு நீர் இதயம் மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது,, அதனைச் சுரப்பதற்காக அதனுடைய இயக்கத்தை துரிதப்பதுகிறது. அட்ரீனலின் சுரப்பு நீரின் இந்தச் செயல், மன அழுத்தத்தின் காரணமாக இதயம் நின்று விடுவதிலிருந்தும் கார்டிக் அரெஸ்டின் பாதுகாkகிறது. இவ்விதமாக அட்ரீனல் சுரப்பு நீர் உயிரைப் பாதுகாக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உயிரைப் பாதுக்காக்கும் பொறுப்பு அட்ரீனலின் என்ற ஹார்மோனுக்கு இருக்கிறது, இதை மிக அளவாகத் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறினால், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படும். அட்ரீனலின் சிறுநீரக கட்டுபாட்டில் தான் உள்ளது.  கர்ப்பப் பையும் சிறுநீரக கட்டுபாட்டில் உள்ளது. ஆகவே, அட்ரீனலின் மூலம் ஏற்படும் விளைவு நேரடியாக கர்ப்பப் பையில் விவரிக்க முடியாத கெடுதல்களை உருவாக்கிறது.  இதனால் கர்ப்பப் பையில் உள்ள இரத்த ஓட்டம் தடைப்படும், எனவே, கர்ப்பப் பைகளும் வலுவிழந்து பலவீனத்தின் காரணமாக அந்த உறுப்பின் சம்பந்தமான ஒவ்வொரு நோயும் கர்ப்பப் பையில் உருவாக நேரிடும். அதாவது, கர்ப்பப்பை எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். இது மாதப் போக்கை தள்ளிப் போக செய்கிறது.  மாதப் போக்கு ஏற்பட்டுவிட்டால், தொடர்ச்சியான இரத்தப் போக்கும் இதன் காரணமாகவே ஏற்படுகிறது. கர்ப்பம் தரிப்பதற்கு, உறுதியான கர்ப்பப் பையாக அது இருக்க வேண்டும். உள்ளே வளரும் குழந்தையும் உறுதியாக, கட்டுக் கோப்பாக இருக்க வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமான அட்ரீனலின் சுரப்பு நீரால் இதயம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கர்பப்பை தளர்ந்திருக்கும்போது உள்ளே வளரும் குழந்தையும் பொல பொலவென்று உறுதியில்லாமல் கட்டுகோப்பில்லாமல் பெருத்த உடம்பாக இருக்கும். எடை கூடுதலாகவும் இருக்கும். அந்தக் குழந்தை கருவிலும் ஆரோக்கியமாக இல்லை, பிறந்த பின்பும் ஆரோக்கியமாக இருக்காது.

அடுத்து, பிரசவத்தின் போது, கர்ப்பப் பை சுருங்க வேண்டும் இல்லையா? அப்பொழுதுதான் குழந்தை சுகப் பிரசவமாகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கர்ப்பப் பை இன்னும் விரிவாகி பிரசவத்தின் போது குழந்தையும் வெளிவராமல், கர்ப்பப் பையும் உள்ளேயே வெடித்து விடும் நிலைக்கு  தள்ளப்படும். பெரும்பாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப் பேற்றின் போது, சுகப் பிரசவம் ஆகுமா? ஆகாதா? என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்கதே.

மேற்க்கொண்டு நாம் ஜோதிட ரீதியாக எவ்வாறு இப்பிரச்சனையை தொடர்பு படுத்தி அணுகலாம். இங்கு, சம்பந்தப்படும் உறுப்புகள் -- சிறுநீரகங்கள், கர்ப்பப்பை, உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை, அட்ரீனலின் சுரப்பி, இனவிருத்தி ஹார்மோன்கள், ஆண், பெண் மலட்டுத்தன்மை முதலியவையாகும். கீழ்க்கண்ட முறையில் கிரகத்தையும், பாவத்தையும் இவ்வாறு பிரிக்க முடியும்.

இனவிருத்திக்கான ஹார்மோன்கள் –- சுக்ரன் மற்றும் 5ம் பாவம்
உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை  --  குரு மற்றும் 5ம் பாவம்
கர்பப்பை  -- குரு மற்றும் 7ம் பாவம்
சிறுநீரகங்கள், அட்ரீனலின் சுரப்பி   -- சனி மற்றும் 7ம் பாவம்

இனவிருத்திக்கான ஹார்மோன்களையும், காதல்/காம உணர்ச்சிகளையும், தாம்பத்ய சுகங்களையும் ஒருங்கே தன்னகத்தில் வைத்துள்ளது சுக்ரன். ஒருவர் மேற்க்கொண்ட கொடுப்பனையை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால் சுக்ரன்  அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு. இதனால், இனவிருத்திக்கான ஹார்மோன்கள் பருவ வயதில் நன்கு அடித்தளமிட்டு வாலிப வயதில் முழுமையான முதிர்ச்சியுடன் குழந்தை பேற்றுக்குக்கான முழு உடல் தகுதி பெரும்.

மேலும், சுக்ரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமோ அதே அளவு  குருவுக்கும் நாம் கொடுக்க வேண்டும். உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை ஆகியவற்றிற்கு காரகம் குரு ஆகும். இவையும் பருவ வயதிற்க் கொண்டே நன்கு அமைய பெற குரு அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு. சுக்ரன், குரு ஒருவருக்கு நன்கு அமைய பெற்றால் ஆண், பெண், மலட்டுத்தன்மை என்கிற குறையை பெரும்பாலும் நிவர்த்திச் செய்யலாம்.

ஆனால், இன்றைய நவீன காலத்தில், ஆண், பெண் மலட்டுத்தன்மை, குழந்தையின்மைக்கு, , உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை,  கர்பப்பை மற்றும் இனவிருத்திக்கான ஹார்மோன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் சிறுநீரகங்களின் தன்மையும், அதன் செயல்பாட்டையும் மிக மிக கவனமாக கருத்தில் கொண்டு அதை நல்ல முறையில் பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், சிறுநீரகங்கள் தான் மேற்க் கூறியவற்றிற்க்காண ஆணிவேர். சிறுநீரகத்தை கெடுத்துக் கொண்டு ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கோ குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. சிறுநீரக கட்டுபாட்டில் உள்ள அட்ரீனலின் சுரப்பியை அளவோடு பயன்படுத்துவதற்கு நாம் நமது உடல் அறிவை சிறிதளவாவது வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சனி கிரகம், உடலிலுள்ள நச்சுப் பொருட்கள், தேவையற்ற சத்துக்கள் மற்றும் செயற்கையான வேதிப் பொருட்களை சிறுநீரகத்தின் உதவியோடு வெளியேற்றி உடலை சமநிலை தன்மையை உண்டாக்குகின்றது. உடலின் சமநிலைக்கு 7ம் பாவமும் பெரிதும் உதவி புரிகின்றது.  ஆகையால், ஒருவருக்கு சிறுநீரகம் நன்கு அமைய பெற அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு என்று கூறி இக்கட்டுரையை இனிதே முடிக்கிறேன்.





Thursday 25 February 2016

கருவுக்குள் உருவா?, உருவுக்குள் கருவா?

திருமூலரின் திருமந்திர வரிகள்:
 “ கருவும் உருவும் இரண்டு என்பார் அறிவிலார்
        கருவே உருவானது யாரும் அறிகிலார்
        கருவே உருவாவது யாரும் அறிந்த பின்
        கருவே உருவாய் அமர்ந்திருந்தாரே! “

கருவும், உருவும் தனித்தனியானவை அல்ல, அவை ஒன்றிலுள்ள ஒன்று என்பதையும், உருவினுடைய அகமாகவும், மையமாகவும் விளங்குவது கரு என்பதையும், உரு என்ற வடிவம் கருவை விளங்குவதற்கான வெளிப்பாடு என்பதையும் மேற்கொண்ட பாடல்கள் விளக்குகின்றன.
இக்கருத்தை நாம் மனித உடலிலிருந்தும், ஜோதிடத்தின் மூலமாகவும் உணர்ந்து கொள்ளலாம்.

மனித உடலிலிருந்து :
உடல் என்பது பார்க்ககூடியது, வெளிப்படையானது, எனவே, இது ‘உரு’ ஆகும். உரு என்பது தனியானது அல்ல என்பது நமக்கு தெரியும். அப்படியானால், உடலின் ‘கரு’ எங்கே இருக்கிறது? உடல் தனித்து இயங்க முடியாது. அதன் ஆதாரம் எதுவாக இருக்கும்? உள்ளே இருக்கும் உறுப்புக்களிலா? தசைகளிலா? இரத்தத்திலா? எலும்பிலா? இல்லை, இவற்றில் அனைத்துமே பார்க்ககூடியதாகவும் வடிவம் உடையதாகவும் இருக்கிறது. அப்படியென்றால், உடலில் உயிர் மட்டுமே மறைவானது.

‘கரு’ வின்  தன்மையோடு உயிரை ஒப்பிடுவோம்.
‘கரு’ மறைவானது, ஆம் உயிரும் மறைவானது
கருவையும் உருவையும் பிரிக்கமுடியாது, உயிரையும் உடலையும் பிரிக்க முடியாது.
உருவிற்கு கரு தான் ஆதாரம், உடலிற்கு உயிர்தான் ஆதாரம்.
வெளிப்புற வடிவமான உருவை மட்டும் பார்த்து கருவை விளங்கிக் கொள்ள  முடியாது. உடலை மட்டும் பார்த்து உயிரை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், உடலின் இயக்கம் உயிரின் இருப்பை உணர்த்தும்.
கரு இல்லாமல் உரு இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை. உடல் இல்லாமல் உயிரைப் பார்க்கவோ, உணரவோ முடியாது.
இவ்வாறு ‘’கரு, உரு’ தத்துவத்தை மனித உடம்பிலிருந்து ஒப்பிட்டு பார்க்கலாம்.

அடுத்து ஜோதிடத்தை எவ்வாறு இனணத்துப் பார்ப்பது :
‘கரு’வை லக்னதொடும், ‘உரு’வை 2ம் பாவதோடும் ஒப்பிடலாம்.
லக்னமும் கரு’வை போன்றே முதன்மையானது. லக்னம் தான் ஒவ்வொரு பாவத்திற்க்கும் மூலாதாரம். கருவும் உடலுக்கு மூலாதாரமாகும். உடலில் கரு (உயிர்) இருக்குமிடம் மூளை, எனவே லக்னம் என்பது மூலம் (SOURCE) அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளும்  மூளையின் (கரு - உயிர்)  கட்டுபாட்டில் இயங்குவதை போல் லக்ன பாவம் பன்னிரண்டு பாவங்களின்  காரகங்களையும் தன் கட்டுபாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும்..
உரு (உடல்) நிலையற்றது – 2ம் பாவமும் நிலையற்றது. ஏனென்றால்  இதில் உள்ள உடற்ச்சக்தி, பேச்சுத் திறன், பொன், பொருள் ஆகியவற்றை தன் தேவைக்கேற்ப நாம் உருமாற்றிக் கொள்ள முடியும். உரு (உடல்) கரு’வை சார்ந்து இருப்பதுதான் அதற்கு மதிப்பு, இல்லையேல் அதற்கு பெயர் பூதஉடல்.. அதே போன்று 2ம் பாவத்தில் உள்ள அனைத்துக் கொடுப்பனைகளும் அனுபவிக்க வேண்டுமெனில் லக்ன கொடுப்பினை மிக இன்றியமையாததாகும். உரு (உடல்) 2ம் பாவத்தை போன்றே வெளிப்படையானது, காணக்கூடியது,
கருவுக்கு லக்ன புள்ளியும், உருவுக்கு 2ம் பாவ கொடுப்பனையும் சரியாக அமையபெரின் அதாவது ஒருவரின் அகம் சார்ந்த காரகங்களையும், புறம் சார்ந்த காரகங்களையும் ஒருங்கே நன்கு அமைந்து விட்டால் அவர் வாழ்வில் அருளும் பொருளும் பெற்று சிறப்புடன் வாழ்வர்.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த லக்ன புள்ளியை துல்லியமாக உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் கணித்து ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும் பார்க்கப்படுகின்றது.  மேலும் விவரங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.

Monday 22 February 2016

பாலுக்கும், கால்சியத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?



நம்முடைய உடலில் ஒரு சத்துப் பற்றாக்குறை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக குறிப்பிட்ட வைட்டமின் மாத்திரையை சாப்பிடுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். அதை வெகுகாலத்துக்கும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.  இங்கு ஒரு கேள்வி எழுகிறது?? அதாவது ஒருவருக்கு உடலில் ஏதேனும் சத்து பற்றாக்குறை இருந்தால் அந்த சத்தை நேரடியாக தான் ஈடுகட்ட வேண்டுமா?? அதாவது அந்த பற்றாக்குறை சத்தை குறிப்பிட்ட உணவு மூலியமாகவோ அல்லது மாத்திரை மூலமாகத்தான் நிறைவேற்ற வேண்டுமா என்ன?? ஒரு உதாரணம் மூலமாக விளக்கினால் அனைவருக்கும் புரியும்.

இங்கு ஒருவருக்கு கால்சியம் குறைந்து போனால், கால்சியம் உள்ள உணவை நேரடியாக சாப்பிட்டுதான் அதைப் பெற முடியுமா? இதுபற்றி அறிவியல் என்ன சொல்கிறது.

1940களில் பிரான்சில் வாழ்ந்த விஞ்ஞானி டாக்டர் லூயி கேர்வரான் பாலை (MILK) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர், மனிதன் கால்சியத்திற்காக பாலைப் பயன்படுத்துகிறான் என்றால், பால் தரும் மாடு கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது என்பதுதான் கேர்வரானின் கேள்வி.
மாடு தன்னுடைய உணவான புல்லில் இருந்து மெக்னீசியத்தைத்தான் பெறுகிறது.  கால்சியத்தை நேரடியாகப் பெறுவதில்லை. மாட்டிற்கு என்று எந்த ஒரு மருத்துவரும் கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதில்லை. ஆக, கால்சியத்தை உணவாக சாப்பிடாத மாடு லிட்டர் லிட்டராக கால்சியத்தை உருவாக்கிறது. இது எப்படி சாத்தியம்?

இதுதான் உடலின் உருவாக்கம்!!! உயிர்ச் சக்தியின் மகிமை!!!
தனக்குத் தேவையான எல்லா வகை சத்துகளையும் உணவுகளில் இருந்து பெறும் சக்தி நம் உடலுக்கு இருக்கிறது.  மாடு மெக்னீசியத்தை கால்சியமாக மாற்றி கொள்கிறது. கோழி தன்னுடைய உணவான மைக்காவில் இருந்து கால்சியத்தை உருவாக்கி பெற்றுக் கொள்கிறது. எந்த உயிரினமும் சத்து தேவை என்று நேரடியாக சத்துக்களை உண்பதில்லை. கிடைக்கிற உணவையே உடல் தன் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது.

இப்படிதான் கால்சியமும்!!!
கால்சியம் சத்திற்காக பாலை நாம் குடிக்க வேண்டியதில்லை. நம்முடைய உணவுகளில் உயிர்ச் சக்தி இருந்தால் போதும். அதுவே, எல்லா வகை சத்துகளையும் உருவாக்கிக் கொள்ளும்.
உயிர்ச் சக்தி என்றால் என்ன? அதிலிருந்து எப்படி சத்துக்கள் உருவாகும்.
இதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். கோழி முட்டையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? கால்சியம், புரதம், கார்போஹைட்ரெட், இன்னும் சில சத்துக்கள், இந்த முட்டையை அடை வைத்தாலோ அல்லது இயந்திரத்தின் மூலம் வெப்பம் கொடுத்தாலோ என்ன நடக்கிறது? கோழி முட்டையின் உள்ளே கோழிக்குஞ்சு உருவாகிறது.

சரி, அந்த குஞ்சி இந்த உயிர்ச் சத்துக்களில் இருந்து உருவாகிறதா? அல்லது, உயிர்ச் சக்தியில் இருந்து உருவாகிறதா? சத்துக்களில் இருந்து உருவாகிறது உண்மை என்றால், முட்டையில் உள்ள அதே சத்துகளை வைத்து ஆய்வுக் கூடங்களில் கோழிக் குஞ்சிகளைத் தயாரித்திருக்க முடியும்.  ஆனால், அப்படி முடிகிறதா?

எந்த உயிரும் சத்துக்களில் இருந்து உருவாவதில்லை. உயிராற்றலில் இருந்துதான் உருவாகிறது.  அதற்குப் பிறகு அந்த உயிர் தனக்குத் தேவையான சத்துக்களை உடலின் உதவியோடு உற்பத்தி செய்து கொள்கிறது. எனவே, நம் உணவுகளில் உயிராற்றல் இருப்பதுதான் முக்கியமே தவிர, சத்துக்கள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. உயிராற்றலில் இருந்து தேவையான சத்துக்கள் அனைத்தும் உருவாகும், நாம் தேடி தேடி போய் சத்துகளை பெறவேண்டியதில்லை.
ஜோதிட ரீதியில் ஒருவருக்கு உயிர் சக்தி / உயிராற்றல்  முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் எப்படி கொடுப்பினை அமைய வேண்டும்??

உயிர் சக்தி  என்றால் என்ன?
புற உணர்ச்சிகளை உடலிற்கு உணர்த்துவதற்காகவும், அவ்வுடலை பராமரிப்பதற்காகவும் தேவைப்படுகிற சக்தி தான் உயிர் சக்தி யாகும், இது இருவகைப்படும்.  1) அகஉயிர்சக்தி ; 2) புறஉயிர்சக்தி.

அகஉயிர்சக்தி : உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையாக அமைந்துள்ள உயிரின் சுய-சக்தியாகும். இதை அதிகபடுத்தவோ, உருவாக்கவோ முடியாது. இதன் இருப்பு தான் உடலின் இருப்பையும் தீர்மானிக்கும்.

புறஉயிர்சக்தி : இது உடலால் பஞ்சபூத மூலகங்களின் துணையோடு உலகிலிருந்து பெறப்படுகின்ற சக்தியாகும். நம்முடைய அன்றாட இயக்கத்திற்கும், செரிமானம், பராமரிப்பு போன்ற இயக்கங்களுக்கும் தேவையான சக்தியை உடல் தன் உறுப்புகளின்  வழியாகப் பெறுகிறது.  உணவு, நீர், காற்று.... போன்ற இயற்கையானவற்றிலிருந்து உடல் புற உயிர்சக்தியைப் பெற்றுக் கொள்கிறது.

இங்கு அகஉயிர் சக்தி நிலையானதால் ஒருவருக்கு லக்ன கொடுப்பினை மிக இன்றியமையாகின்றது.

புறஉயிர்சக்தியை நிலைநாட்ட செரிமானம், பராமரிப்பு, உடலின் சமநிலை போன்ற காரணிகள் தேவைப்படுவதால் ஒருவருக்கு 6, 7 ஆம் பாவ கொடுப்பினைகள் உதவ வேண்டும்.

மேற்கூறிய பாவங்களோடு, கிரக காரகத்தையும் நாம் இணைத்துப் பார்த்தால் புதன் கிரகம் இங்கு நன்கு பொருந்தி வரும். அதாவது, ஒருவர் உண்ணுகிற உணவு எதுவாகினும் நன்கு செரிக்கப்பட்டு, சத்துக்கள் உறிஞ்சப்பட்டு பிறகு அது  இரத்தத்தில் முறையாக கலந்து பிறகு உடலுக்கு தேவையான அணைத்து விதமான சத்துகளும் இயற்க்கையாகப் பெற்று பின் உடல் தன்னுடைய தேவையை தானே பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் -- இயக்க சக்தி, செரிமான சக்தி, பராமரிப்பு சக்தி ஆகிய மூன்றும் ஒரே கோட்டின் கிழ் சரி சதவிகித கலவையில் நன்கு அமைய பெற வேண்டும். இந்த மூன்றும் மூளை மற்றும் நரம்பு மண்டல கட்டுபாட்டில் அமைய பெற்றிக்கிறது.

செரிமான சக்தி மட்டும் இயங்க சந்திரன் (சமைத்த உணவு), கேது (இரைப்பையில் உள்ள அமிலம்) ஆகிய கிரகங்கள் போதும். ஆனால், இங்கு இயக்க சக்தியும், செரிமான சக்தியும் சேர்ந்து இயங்க வேண்டுமென்றால் மூளையும், நரம்பு மண்டலமும் இங்கு பிரதான அங்கம் வகிக்க வேண்டும்.

ஆகவே, புதன் கிரகத்தையும், 6, 7 ஆம் பாவ  கொடுப்பினைகளையும் பொருத்திப் பார்த்து பலனை நிர்ணயிக்க வேண்டும்.

நாங்கள் உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் ஒருவரது ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும் பார்க்கபடுகின்றது.  மேலும் விவரங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.

Saturday 20 February 2016

பிரியாணி, பரோட்டா, மாமிசம் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்? ஆனால்???



இறைவன் படைத்த இயற்கை உணவில் எந்த குறையும் இல்லை, எந்த தீங்கும் இல்லை.

நாம் எந்த உணவாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையிருப்பதாக சுட்டி காட்டியிருக்கிறோம்.

பழங்கள் சாப்பிட்டால் குளிர்ச்சி, கிழங்கு வகைகள் சாப்பிட்டால் வாய்வு, இயற்கை இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை, மாமிசம், தேங்காய் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம்.
இறைவன் படைத்த இயற்கை, நிச்சயம் தவறு செய்யாது. மனிதன் தான் தவறாக எடுத்துக் கொள்கிறான். மேலே குறிபிட்டுள்ள உணவுகளில் எந்த கெடுதியும் இல்லை.  ஆனால், அது உண்மையானது எப்போது என்றால் நாம் பசி உணர்வு இல்லாமல் சாப்பிடும்போது அந்த உணவுகள் குளிர்ச்சியாகவும், வாய்வாகவும், சர்க்கரையாகவும், கெட்ட கொழுப்பாகவும் மாறுகிறது.

உதாரணமாக நாம் மதியம் நல்ல பசியில் அசைவ உணவு (பிரியாணியோ, பரோட்டாவோ) எடுத்துக்கொள்கிறோம். அதுவும் நன்றாக சாபிட்டாகிவிட்டது. மறுபடியும் பசி எடுக்க 12 மணி நேரமோ அல்லது 18 மணி நேரமோ வரை ஆகிறது என்று வைத்துகொள்வோம். அதுவரை நாம் பொருத்திருப்பதில்லை, அடுத்தடுத்து வேலைக்கான உணவை பசியில்லாமல் உண்ணும் பொழுது மாமிச உணவு ஜீரணம் ஆகாமல் கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அதே சமயம் பசி எடுத்து உண்ணும் அசைவ உணவு நல்ல கொழுப்பாக மாறுகிறது. ஆக, நாம் தான் கெட்ட கொழுப்பை  உற்பத்தி செய்கிறோம். உணவு அல்ல.  அதாவது, நம் உடம்பை கெடுப்பது இங்கு மாமிசமோ, பிரியாணியோ, பரோட்டவோ இல்லை, மாறாக ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமலே அடுத்த வேலைக்கான உணவை சாப்பிட தயாராகிறோம்.

இது ஒருபுறமிருக்க, ஒருவருக்கு சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணம் ஆக, அவருடைய ஜீரண உறுப்பு நன்கு வேலை செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அடுத்த வேலை உணவுக்கு தயாராக முடியும். 

இதையேதான் வள்ளுவர் 

       " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
              அற்றது போற்றி உணின் "
என்றார்.

அதாவது, நாம் உண்ட உணவு நன்றாக செரித்து விட்டது என்று அறிந்த பிறகு மீண்டும் உண்ணுகிற பழக்கத்தை மேற்கொண்டால் இந்த உடலுக்கு மருந்து என்று ஒன்று தேவையே இல்லை என்று வலியுறுத்துவார்.

அடுத்து, ஜோதிடரீதியிலும் நாம் ஆராய்ந்து, அவருக்கு விதி கொடுப்பினை நன்றாக உள்ளதா என்று கீழ்கண்ட முறையில் பார்க்க வேண்டும்.
      
         சமைத்த உணவுக்கு --- சந்திரன் கிரகம்
         இரைப்பையில் உள்ள அமிலத்திற்கு –- கேது கிரகம்
         வயீறு, உணவு போன்றவற்றிற்கு –- 6ம் பாவம்

சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணம் ஆக, இரைப்பையில் உள்ள அமிலம் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, சந்திரன், கேது ஆகிய கிரகங்கள் மற்றும் 6ம் பாவம் ஒருவருக்கு நன்கு வலிமையடைந்தால் ஜீரண சம்பந்தமான பிரச்சனையின்றி எந்த உணவையும் நன்கு அனுபவித்து சாப்பிடலாம்.


நாங்கள் உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் ஒருவரது ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும் பார்க்கபடுகின்றது.  மேலும் விவரங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.

Thursday 18 February 2016

தோல் நோய் சம்பந்தமான பிரச்சனையா? சனி கிரகத்தையும் + 12ம் பாவத்தையும் பார்?


பெரும்பான்மையோருக்கு தோலில் அரிப்பு, எரிச்சல், புண்கள் என்றால் ஏதோ தோல் சம்பந்தமான வியாதி என்று நினைகின்றனர்.  ஆனால், இங்கு தோலில் பிரச்சனை இல்லை, மாறாக உடலில் உள்ள கழிவுகள் உடலிலேயே தேங்கி முழுமையாக வெளியேறாமையே உண்மையான காரணம். 

சரி, கழிவுகள் ஏன் தேங்குகிறது?? உடலைவிட்டு வெளியேறாமைக்கு என்ன காரணம்??  நாம் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம்?? சிந்தித்தால் கிடைக்கும் பதில் -- நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் கழிவுகள் உடலை விட்டு வெளியேற மறுக்கின்றன. அப்படி என்னதான் செய்கின்றோம் நாம்??
பொதுவாகவே, உடலில் உள்ள கழிவுகள் மலம் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ அல்லது சளியின் மூலமாகவோ வெளியேறுகின்றன. ஆனால், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் இயற்கை விதிமீறல்களால் இவற்றில் தடை ஏற்படுகின்றன. என்ன விதிமீறல்கள்??

முறையற்ற உணவு பழக்கம்
தாகமிருக்கும்போது – நீர் அருந்தாமலிருப்பது
தாகமில்லாதிருக்கும்போது – நீர் அருந்துவது
பசியிருக்கும்போது  -- சாப்பிடாமல்  இருப்பது
பசியில்லாதிருக்கும்போது  -- சாப்பிடுவது
தூக்கம் வரும்போது -- விழித்திருப்பது
ஒய்வு தேவையின்போது – உழைப்பது
அளவுக்கு அதிகமாக உழைப்பது
நல்ல உணர்வுகளுக்கு மாறாக நடப்பது.

மேற்கண்ட விதிமீறல்களால் கழிவுகள் தேங்குகிறது, இருப்பினும் கழிவுகள் உடலைவிட்டு வெளியேற துடிக்கின்றன. இது போதாதென்று நாம் எடுத்துகொள்ளும் மருந்துகளாலும் சிக்கல் பெரிதாகின்றது. இப்பொழுது நம் உடம்பு காய்ச்சல் என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அதன் மூலம் கழிவுகளை வெளியேற்ற பாடாபடுகின்றது. சளைக்காமல் நாமும் மருந்தை உட்கொண்டு மேலும் காய்ச்சலை தடுத்துவிடுகின்றோம்
.
இப்பொழுதுதான், நம் உடம்பு அனைத்துவிதமான கழிவுகளையும் வேர்வையின் மூலம் வெளியேற்றுகின்றது. அதாவது, சரியான உண்மையை கூறவேன்டும்மென்றால், வேர்வையின் மூலமாக நம்முடைய மலமும், சிறுநீரும் தோல் வழியாக வெளியேறுகின்றது. இதனால்தான்,  தோலில் அரிப்பு, எரிச்சல், புண்கள் உண்டாகின்றன.

இங்கே, நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தோலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்ய SKIN SPECIALIST களையோ OILMENT, CREAM போன்ற செயற்கை உபகரனங்களையோ உபயோகிக்க  முற்படக்கூடாது. மாறாக, கழிவுகள் உடலைவிட்டு இயற்கையான முறையில் வெளியேற அனுமதிக்க வேண்டும்,

இங்கு உடல் நல சீர்கேட்டிற்கு, ஜோதிடத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் நிரந்திர தீர்வு கிடைக்கும்.
சனி கிரகமும், 12ம் பாவமும்  உடலில் உள்ள கழிவுகளுக்கு காரகமாகும்.  சனியும், 12ம் பாவமும் நம் ஜாதகத்தில் வலு குறைந்திருந்தால் மேற்கூறிய தோல் சம்பந்தமான நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட நேரிடும். இதனுடைய தசா, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகிய காலங்களில் நாம் இந்நோய்களை அனுபவிக்க நேரிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இங்கே, நம் உயர் கணித சார ஜோதிட அடிப்படையில் துல்லியமாக நோய்களையும் அதற்கு சம்பந்தமான கிரகங்களையும் + பாவங்களையும்

கண்டறிந்து அதற்கு தக்க வகையில் ஆலோசனையும், மருத்துவமும், பார்க்கப்படும் என்பதை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.