நாம் சில நேரங்களில்
மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல்
மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். நடக்கக் கூட முடியாத நிலையில்
இருக்கும் போது நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே
உடலுக்குச் சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா? சாப்பிட்ட
உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும்.
ஆனால், அறிவியல் ரீதியாக நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்கு சென்று
அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும்
ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே,
நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகு தான் சக்தி கிடைக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரையின்
அளவை சோதனை செய்து பார்ப்பார்கள். இதற்கான
காரணம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு தான்
சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. ஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி
கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?
நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு
குறிப்பிட்ட அளவு சக்தி கிடக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதி பிராண சக்தி கிடைக்கிறது. நாம் உணவை வாயில் மெல்லும் போது
அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளி புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுக்கள் (TASTE BUDS) மூலமாக சுவைகளைக் கிரகித்து உடல் முழுவதும்
அனுப்பி விடுகிறது. நமது நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள் சுவையைப் பிராண
சக்தியாகி மாற்றி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பி மண்ணீரல் உடலில் உள்ள
அனைத்து செல்களுக்கும் பிரித்து கொடுக்கிறது.
நம் பாரம்பரிய
உணவுமுறையான தனிச்சீர் உணவும் – ‘அறுசுவை’ என்ற அடிப்படைச் சமன்பாட்டைக்
கொண்டிருக்கிறது. அறுசுவை நம் உடலுக்கு நல்லது என்று மேலோட்டமாக நாம்
அறிந்திருந்தாலும், அதன் மூலம் நம் உள்ளுறுப்புகள் எவ்வாறு சக்திப் பெற்று
இயங்குகிறது என்பது பெரும்பாலோனருக்கு தெரியாது..
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை
செய்து கொண்டிருக்கும். நம் உடலில் மொத்தம் ஐந்து விதமாக பிராண சக்தி இயங்குகிறது.
.அதாவது,
1.ஆகாய பிராண சக்தி;
2.நீர் பிராண சக்தி;
3.மண் பிராண சக்தி;
4.காற்று பிராண சக்தி;
5.நெருப்பு பிராண சக்தி........... ஆகும்.
ஆகாய பிராண சக்தி:
ஆகாய பிராண சக்தி
இயங்குவதற்கு புளிப்பு சுவை
தேவைப்படுகிறது. புளிப்பு என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை
மொட்டுக்கள் புளிப்பு என்ற சுவையை ஆகாயம் என்ற பிராண சக்தியாக மாற்றி உடல்
முழுவதும் அனுப்பிவிடும். ஆகாயம் என்ற பிராண சக்திக்குக் கல்லீரல், கண்கள், பித்தப்பை இவை மூன்றும் வேலை
செய்யும். கண்ணும், கல்லீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். கண்ணிற்கும்,
கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் கோபம்
என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு.
நீர் பிராண சக்தி:
நீர் பிராண சக்தி
இயங்குவதற்கு உப்பு சுவை
தேவைப்படுகிறது. .உப்பு என்ற சுவை
நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் உப்பு என்ற சுவையை நீர் என்ற
பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பிவிடும். நீர் என்ற பிராண சக்திக்குக்
சிறுநீர்கள், காதுகள், மூத்திரப்பை இவை
மூன்றும் வேலை செய்யும். காதும், சிறுநீரகமும் ஒரே மாதிரியான வடிவத்தில்
இருக்கும். காதுக்கும், சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் பயம் என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு
மண் பிராண சக்தி:
மண் பிராண சக்தி
இயங்குவதற்கு இனிப்பு, துவர்ப்பு என்ற சுவைகள்
தேவைப்படுகிறது. .இனிப்பு, துவர்ப்பு என்ற
சுவைகள் நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் இனிப்பு, துவர்ப்பு என்ற
சுவையை மண் என்ற பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பிவிடும். மண் என்ற
பிராண சக்திக்குக் இரைப்பை, மண்ணீரல் உதடுகள்
இவை மூன்றும் வேலை செய்யும். உதடும், மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில்
இருக்கும். உதடுக்கும், மண்ணீரலிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் கவலை என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு
காற்று பிராண சக்தி:
காற்று பிராண சக்தி
இயங்குவதற்கு காரச் சுவை
தேவைப்படுகிறது. .காரம் என்ற சுவை
நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் காரம் என்ற சுவையை காற்று என்ற
பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பிவிடும். காற்று என்ற பிராண
சக்திக்குக் நுரையீரல், பெருங்குடல் மூக்கு இவை
மூன்றும் வேலை செய்யும். மூக்கும், நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில்
இருக்கும். மூக்குக்கும், நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் துக்கம் என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு
நெருப்பு பிராண சக்தி:
நெருப்பு பிராண சக்தி
இயங்குவதற்கு கசப்பு சுவை
தேவைப்படுகிறது. கசப்பு என்ற சுவை
நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் கசப்பு என்ற சுவையை நெருப்பு
என்ற பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பிவிடும். நெருப்பு என்ற பிராண
சக்திக்குக் இதயம், பெரிகார்டியம், சிறுக்குடல், மூவெப்பமண்டலம்
(TRIPLE
WARMER) இவை நான்கும் வேலை செய்யும். நாக்கும், இதயமும் ஒரே
மாதிரியான வடிவத்தில் இருக்கும். நாக்குக்கும், இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு
உள்ளது. மேலும் அளவுக்கு அதிகபடியான சந்தோஷம்,
தற்பெருமை என்ற உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உண்டு.
இப்போது சில
உதாரணங்களுடன் எடுத்துரைத்தால், பஞ்சபூத சக்தியின் மூலம் அறுசுவையின் அருமை,
பெருமைகள் தெரியும்.
கருவுற்றிருக்கும்
ஒரு பெண்மணியை கவனிப்போம். கருவை வயீற்றில் சுமந்திருக்கும் தாய்மார்கள் சில
சுவைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். என்ன சுவைகள்?? பெண்கள் கருவுற்ற காலத்தில்
சிறுநீரகமும், கல்லீரலும், மண்ணீரலும் கரு வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றன என்று
கூறுகிறது பாரம்பரிய மருத்துவங்கள்.
சிறுநீரகத்தின் சுவை -- உப்பு
கல்லீரலின் சுவை -- புளிப்பு
மண்ணீரலின் சுவை -- துவர்ப்பு,
இனிப்பு
இம்மூன்று சுவைகள்
தான் தாய்மார்களின் தேவைகளாக கர்ப்பப்பை பலமடையும் வரை இருக்கின்றன. புளிப்பையும்,
உப்பையும் கொண்டுள்ள ஊறுகாயையும்,
புளிப்பான மாங்காயையும், துவர்ப்பு சுவையுள்ள சாம்பலையும் அவர்கள் விரும்புவது
இயல்புதான்.
இப்படி, ஒவ்வொரு
உள்ளுறுப்பும் – ஒவ்வொரு சுவையில் ஊக்கம் பெறுகிறது, தனக்குத் தேவையான சுவையை உடல்
தன் உணர்வுகள் மூலம் நமக்குத் தெரிவிக்கிறது. நாம் நம் சுவையுனர்வுகளை கவனிக்கத்
தவறுகிறோம். தேவையற்ற சுவைகளுள்ள உணவுகளை ரசாயனச் சுவை கூட்டும் முறையால்,
கூடுதலாக அளவிற்கு அதிகமாகச் சாப்பிடும் போது குறிப்பிட்ட சுவையோடு தொடர்புடைய
உறுப்பு பலவீனமடைகிறது. தேவைப்படும் சுவையுனர்வை புறக்கணிப்பதால் ஓர் உள்ளுறுப்பும்,
தேவையற்ற சுவைகளை அளவுமீறி எடுத்துக் கொள்வதால் இன்னும் சில உள்ளுறுப்புகளும்
பலவீனபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட உள்ளுறுப்பின் பலவீனத்தை சுவையின் மூலம் உடல் அறிவிக்கிறது. அக்குறிப்பிட்ட
சுவையுள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல்நலக் கேடுகளிலிருந்து விடைபெறலாம்.
சுவை உணர்வு மூலமாக உடல்
தன் உள்ளுறுப்பின் பலவீனத்தை அறிவிப்பது முதல் நிலை, தொடர்ந்து வெளிப்புற
உறுப்புகளின் மூலமும் தன் நிலையை உடல்
அறிவிக்கிறது. பாரம்பரிய முறைகள் உள்ளுறுப்புக்களில் ஐந்தை மட்டுமே ‘ராஜ
உறுப்புக்கள்’ என்று அழைத்தன பிற உள்ளுறுப்புக்கள் ராஜ உறுப்புக்களைச் சார்ந்து
இயங்கும் துணை உறுப்புக்களாகக் கருதப்பட்டன.
ராஜ உறுப்புக்கள் ஐந்து:
1.இதயம், 2.மண்ணீரல், 3.நுரையீரல், 4.சிறுநீரகம், 5.கல்லீரல்
இவற்றின் சுவைகளை
நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம், நம்முடைய சுவைத் தேவையை வைத்து எந்த உறுப்புக்கள்
சக்தித் தேவையில் இருக்கின்றன என்பதை அறிய முடியுமல்லவா? இங்கே நாம் குறிப்பிடும்
பலவீனம், சக்தி தேவை, சீர்கேடு என்பவைகள் எல்லாம் உடலின் மறைவான சக்தி ஓட்டத்தைக்
குறிப்பிடுபவை. ஒருவருக்கு உப்புச்சுவை அதிகம் தேவைப்படுகிறது
என்பதை வைத்து என்ன உணர்கிறோம்? அவரின் சிறுநீரகம் பழுதடைந்துள்ளது என்பதை அல்ல,
சிறுநீரகத்திற்குத் தேவையான உயிர்சக்தி குறைப்பட்டிருகிறது என்பதாக பொருள், அதைப்போல்,
புளிப்பு சுவையை ஒருவர் அதிகம் விரும்பினால், கல்லீரலில் உயிர்ச் சக்தி குறைபாடு
ஏற்பட்டிருக்கிறது என்பது பொருளாகும்.
இந்த சக்தி குறைபாடு
நீடிக்கும்போது படிப்படியாக அவ்வுறுப்பை பாதிக்கத் துவங்குகிறது. நோயினுடைய வெளிப்பாடு
துவங்குவதற்கு பல காலம் முன்பே சக்தி குறைப்பாட்டை உடல் நமக்கு அறிவித்து
விடுகிறது. நாம் உடலின் அறிவிப்புக்களை புறந்தள்ளி விட்டு, நோயின் வெளிப்பாடுகளை
வாங்கி கொள்கிறோம். நோய்களின் முன்னிறிவிப்பான சுவை தேவையை நாம் புறக்கணிப்பதே
உள்ளுறுப்புகக்ளின் சீர்கேட்டிற்கு காரணமாக அமைகிறது.
சுவைத் தேவைகளின்
அடிப்படையில் தான் ஆரம்பக்கால மருந்துகள் தோன்றின. உதாரணமாக – நுரையீரல்
தொந்தரவுகளுக்கான சுவை என்ன? காரம்! காரச்சுவையைக் கொண்டுள்ள மூலிகை மருந்துகளை
சித்த மருத்துவம் பரிந்துரை செய்தது. அவைதான் மிளகு, இஞ்சி, துளசி போன்றவை. இப்படி
எந்த உள்ளுறுப்பு பாதிக்கபட்டிருக்கிறதோ அந்தச் சுவையை தேவையின் அடிப்படையில் கூட்டியோ, குறைத்தோ தருவதுதான்
சித்த மருத்துவம். இருமலுக்கு – சுக்கு, மிளகு என்று கூறப்படுகிறதே தவிர, ஏன் அவை
பரிந்துரைக்கப்பட்டன என்பதே மறந்து விட்டது.
அடுத்து, அறுசுவையை
வேறுவிதமாக பயன்படுத்தி எவ்வாறு நோயை குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்
1.சுவை ஒழுங்குமுறை, 2, எதிர்சுவை அளித்தல்
ஒரு நபருக்கு பிடித்த
சுவை ஒன்று இயல்பாகவே அமைந்திருக்கும், உடலில் நோய் ஏற்படும் காலங்களில் எந்தச்
சுவை வழக்கமாகப் பிடிக்குமோ அச்சுவையை மட்டும் முற்றிலும் தவீர்த்துவிட வேண்டும். ஏன்
தவிர்க்கனும்? அளவுக்கு அதிகமாக ஒரு சுவையை அதிகம் சாப்பிடும்போது அந்த சுவையே
அவருடைய உடல்நலக்கேட்டிற்க்கு காரணமாக அமைந்துவிடும். ஆகையால், நோயின் தீவிரம்
குறைந்த பிறகு படிப்படியாக அச்சுவையை அளவு மீறாமல் சேர்த்து கொள்ளலாம். அதே
நேரத்தில், நோயுற்ற காலத்தில் அளவுக்கு அதிகமாய் எடுத்துக் கொள்ளும் இந்த சுவையை
நிறுத்தி விடுவது நல்லது தான், அதே நேரம்
அளவுக்கதிகமான இச்சுவையைக் குறைக்க மாற்று சுவையின் மூலமும் நோயை குணபடுத்தலாம்.
ஆம்! ஒவ்வொரு சுவைக்கும் ஒரு எதிர்ச்சுவை உண்டு. எந்தச் சுவை மூலம் ஒரு
தொந்தரவுகளை அடைந்தோமோ அதற்கு நேரெதிரான சுவையுள்ள உணவைச் சாப்பிடுவதன் மூலம்
விரைவான குணம் பெறலாம்.
ஆறு சுவைகளின் எதிரெதிர் சுவைகள் இதோ :
இனிப்பு -- காரம்
புளிப்பு -- உப்பு
துவர்ப்பு -- கசப்பு
இவை ஒன்றுக்கொன்று
எதிர்சுவையாகும்.
ஒரு குறிப்பிட்ட சுவை
அதிகரிப்பதால் ஏற்படும் தொந்தரவுகளை எதிர்சுவை உணவுகள் மூலம் எளிமையாக்கிக்
கொள்ளலாம் உதாரணமாக, வீடுகளில் தோசைமாவில் புளிப்புச்சுவை கூடிவிட்டால் கொஞ்சம்
உப்பை தூவி சமம் செய்வார்கள். அதைப்போல, இனிப்பு சுவையை சமன் செய்ய காரம்
பயன்படுத்துவோம். நம் நாக்கில் இனிப்புச் சுவை அதிகரித்து விட்டால், அதை விடக்
குறைவான இனிப்பை (காபி, டீ) உணர முடியாது. எனவே,
அதிகமாய் உள்ள இனிப்புச் சுவையை சமன் செய்ய காரத்தைப் பயன்படுத்தினால் போதும்.
இதுவரை,
மருத்துவரீதியாக சுவையின் சிறப்பைப் பார்த்தோம், அடுத்து, ஜோதிடரீதியில் ஆய்வு
செய்யும் போது, கிரகத்தையும், பாவத்தையும் எவ்வாறு இணைத்து பார்ப்பது என்பதை
கீழ்வருமாறு அறியலாம்.
புதன், சந்திரனே
அனைத்து விதமான சுவைக்கும் காரகம் வகிக்கும் கிரகங்களாகும். புதன் நரம்புமண்டலத்திற்க்கும்,
சந்திரன் மனோநிலைக்கும் காரகன் என்று பிரித்து கூறலாம். சுவை என்பதே ஒரு வித
மயக்கத்தினை குறிக்கும் உணர்வாகும். மனோநிலை, உணர்ச்சிகள் போன்ற காரகங்களை
குறிப்பது சந்திரன் ஆகும். சுவை நாக்கில் உணரப்பட்டாலும், அதை நரம்பு மண்டலம் தான்
மூளைக்கு அறிவுறுத்துகின்றது. இருந்தாலும் அறுசுவையை பஞ்ச பூத சக்தியின்
துணைக்கொண்டு கீழ்வருமாறு பகுத்து பிரித்து கூறவது சரியான முறையாகும்.
காற்று சக்தி à உறுப்புக்கள் -– நுரையீரல், பெருங்குடல்
இயற்கையான காரம் :- இஞ்ஜி, பூண்டு, மிளகு, துளசி – சூரியன், செவ்வாய்
செயற்கையான காரம் –-
மிளகாய், மசாலா கலந்த காரம் -- ராகு
மண் சக்தி à உறுப்புக்கள் –- மண்ணீரல், வயீறு
இயற்க்கை இனிப்பு, -–
பழங்கள், தேன் -- குரு ;
செயற்கை இனிப்பு –- சர்க்கரை,
ரசாயன கலந்த சுவை – சுக்கிரன்
துவர்ப்பு – கீரைகள்,
வாழைப்பூ – கேது
ஆகாய சக்தி à உறுப்புக்கள் -- கல்லீரல், பித்தப்பை
இயற்கையான புளிப்பு ––
ஆப்பிள் பழம், எலுமிச்சை, மாங்காய் – குரு
செயற்கையான புளிப்பு ––
ஊறுகாய், அப்பளம், கருவாடு – ராகு
நெருப்பு சக்தி à உறுப்புக்கள் -- இதயம், சிறுக்குடல், பெரிகார்டியம், மூவெப்பமண்டலம்
இயற்கையான கசப்பு – பாவக்காய்,
ஒரு சில கீரைகள்,– சூரியன்
செயற்கையான கசப்பு – மதுவகைகள்,
சில குளிர்பானகள்(PEPSI, COKE) - சனி
நீர் சக்தி à உறுப்புக்கள்
-- சிறுநீரகம், மூத்திரப்பை
இயற்கையான உவர்ப்பு –
நீர்ச்சத்து நிரந்த காய்கறிகள், பழங்கள் – சனி
செயற்கையான உவர்ப்பு –
கருவாடு, ஊறுகாய், பாகெட் உணவுகள் – ராகு, கேது
பொதுவாக 2ம் பாவத்தை இணைத்து சுவை உணரும் சக்திக்கு
குறிப்பிடுவார்கள். ஆனால், இங்கு 6ம் பாவத்தையும் இணைத்துப் பார்த்தல்தான் தான் சரியாக
பொருந்திவரும். ஏனென்றால், 6ம் பாவத்தில் உள்ள வயீறு, மண்ணீரல், செரிமானத்துக்கு
தேவைப்படும் அமிலம் ஆகியவை அனைத்தும்
பொருந்தும். சுவையை நன்கு கிரகித்து அதை உணர நாக்கு எந்த அளவு முக்கியமோ, அதே அளவு
அந்த சுவையில் உள்ள பிராண சக்தியை உடலுக்குச் செலுத்த வயிற்றிலுள்ள மண்ணீரலால்
மட்டுமே முடியும். ஆகவே, 2ம்,. 6ம் பாவத்தை ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு சுவைக்கும் ஒரு பஞ்சபூதம் /
கிரகம் வேறுபடுகிறபடியால் நாம் கீழ்வரும் முறையையே பகுத்து கூறுவது
பொருத்தமானதாகும். ஒருவருக்கு 2ம், 6ம் தான் நின்ற
நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் 6, 8, 12 தொடர்புக் கொண்டு கீழ்க்கண்ட கிரக தொடர்புப் பெற்றால்.....
புதன், சந்திரன் -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் ,6, 8, 12 தொடர்பு பெற்றால் --- அறுசுவையுள்ள எந்த உணவையும் உடல் ஒத்துக்கொள்ளாது
என்பது பொருளாகும்.
சனி -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 6,
8, 12 தொடர்பு பெற்றால் --- உவர்ப்பு, கசப்பு சுவைகள் உடல் ஒத்துக்கொள்ளாது என்பது
பொருளாகும். ஆனால், மற்ற நான்கு சுவைகள்
மூலம் சாப்பிடும் உணவினால் எந்த தீங்கும் ஏற்படாது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
சூரியன், செவ்வாய் -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 6, 8, 12 தொடர்பு பெற்றால் --- காரச் சுவை உடல் ஒத்துக்கொள்ளாது என்பது
பொருளாகும். ஆனால், மற்ற ஐந்து சுவைகள்
மூலம் சாப்பிடும் உணவினால் எந்த தீங்கும் ஏற்படாது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்
குரு -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 6, 8, 12 தொடர்பு பெற்றால் --- இயற்க்கை இனிப்பு + புளிப்பு சுவைகள் உடல்
ஒத்துக்கொள்ளாது என்பது பொருளாகும்.
ஆனால், மற்ற நான்கு சுவைகள் மூலம் சாப்பிடும் உணவினால் எந்த தீங்கும் ஏற்படாது
என்று எடுத்துக் கொள்ளவேண்டும்
சுக்கிரன் -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 6, 8, 12 தொடர்பு பெற்றால் --- செயற்க்கை இனிப்பு சுவை உடல் ஒத்துக்கொள்ளாது என்பது
பொருளாகும். ஆனால், மற்ற ஐந்து சுவைகள்
மூலம் சாப்பிடும் உணவினால் எந்த தீங்கும் ஏற்படாது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்
ராகு, கேது -- 2-ம் பாவ உப.நட்சத்திர அதிபதியாகவோ (அ) உப உப .நட்சத்திர அதிபதியாகவ (அ) நட்சத்திர அதிபதியாகவோ வந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 6, 8, 12 தொடர்பு பெற்றால் --- செயற்க்கையான அறுசுவைகளை உடல் ஒத்துக்கொள்ளாது என்பது
பொருளாகும். ஆனால், மற்ற இயற்க்கை
சுவையுள்ள அறுசுவைகள் மூலம் சாப்பிடும் உணவினால் எந்த தீங்கும் ஏற்படாது என்று
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.
No comments:
Post a Comment