Friday 26 February 2016

மலட்டு தன்மைக்கும், குழந்தையின்மைக்கும் சிறுநீரக உறுப்பு (KIDNEY) குறைபாடே??? ஏன்? ஏதற்கு? எப்படி?











குழந்தை பிறப்பிற்க்கான தாமதத்தை அல்லது மறுக்கபடுவதை ஆணுக்கோ / பெண்ணுக்கோ நவீன விஞ்ஞானமும், மருத்துவர்களும் எவ்வாறு பார்க்கின்றனர்., அதற்கான காரணங்களாக கூறப்படுபவைகள் யாவை.

1) முறையற்ற வாழ்க்கைமுறை ; 2) துரித உணவுகள் ; 3) மன அழுத்தம் ; 4)அதிக வேலைபளு ; 5) குறைந்த தூக்கம் ; 6) சர்க்கரை நோய் ; 7)போதிய-உடற்பயிற்சியின்மை; இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம்.....

சரி, மேலே குறிப்பிட்டவகைகளில் மட்டும் தான் உண்மையான காரணங்களா?. இல்லவே இல்லை.... நாம் வேறு சில கோணத்தில் புதிய ஆய்வுகளை மேற்க்கொள்ளலாம்.

பஞ்ச பூத தத்துவ ரீதியில் ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கோ அல்லது குழந்தையின்மைக்கோ எதைக் முக்கியக் காரணமாகக் குறிப்பிடுகிறது. பஞ்ச பூதத்தில் உள்ள “நீர்” மூலகத்தில் சிறுநீரகமும், மூத்திரபையும் உள்ளன. குறிப்பாக சிறுநீரகம் ஆண், பெண் இனவிருத்தி உறுப்புக்கள் மற்றும் அதற்க்குண்டான ஹார்மோன்கள், உயிரணுக்கள், கர்பப்பை, விந்துப்பை, சினைமுட்டை மற்றும் அட்ரீனலின் சுரப்பி ஆகியவற்றை தன் முழு கட்டுபாட்டில் வைத்துள்ளது. நாம் எவ்வாறெல்லாம் சிறுநீரகங்களின் உயிர்ச் சக்தியை சிதைக்கின்றோம் என்பதை பின்வருமாறு அறியலாம். 

முறையற்ற உணவுமுறை:
இப்பொழுதெல்லாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலை ‘ஸ்லிம்’ மாக,  ‘ட்ரிம்’ மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இளைஞர்களிடையே காணப்படுகிறது. இது அதிகமாகவும் வருகிறது. அதாவது வருத்திக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதாகும். குறிப்பாக பட்டினி கிடக்கிறார்கள். அதுவும் வளர்ந்து வரும் வயதில், நன்றாக வளரும் பருவம், முறையாக சாப்பிட வேண்டும். “பசி எடுக்கும் பொழுது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக் கூடாது” போன்ற உண்மைகளை சான்றோர்கள் அறிவார்கள். “வேளாவேலைக்கு சாப்பிடு“ என்று முதியவர்களும்  கூறுவார்கள். பசி எடுப்பதனுடைய பொருளானது “உடலினுடைய சக்தி நிலை குறைந்திருக்கிறது, இப்போது சக்தி தேவை” என்பதாகும். ஆக, ஜீரண சுரப்பு நீர்கள் வாயிலும், வயிற்றிலும் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது பசி உணர்வைத் தோற்றுவிக்கிறது. உணவை ஜீரணிக்கக் கூடிய இந்த ஜீரண நீர்கள் உணவு ஊட்டப்படாமல் தவிர்க்கப்படும் பொழுது, வயிற்றை அரிக்க ஆரம்பிக்கின்றன. வயிற்றில் எரிச்சல் உருவாகிறது. இந்த எரிச்சல் நாளைய புண்களுக்கும், அஜீரணதிற்க்கும், வாய்வு தொந்தரவுகளுக்கும் காரணமாக அமையும்.

இதன் காரணமாக மனதில் கவலையும், கோபமும் அதிகமாக வந்து வந்து போகும். இதனால் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும். உணவிலிருந்து எந்த உயிர்ச் சக்தியையும் முழுமையாக கிரகிக்க முடியாது. உணவின் ஜீரணத்திலிருந்து வெளியாகும் க்ளுகோஸ் (glucose) சர்க்கரை முறைகெட்டதாக இருக்கும். இந்த முறைகெட்ட க்ளுகோஸ் உடலுக்கு ஒவ்வாமையையும், அலர்ஜியையும் ஏற்படுத்தும். இந்த முறையற்ற ஜீரணத்தின் வாயிலாக உருவாகியுள்ள அந்தக் கெட்ட க்ளுகோஸானது சிறுநீரில் கழிவுகளாக வெளியேற்றப்படும்.

சிறுநீர் வழியாக வெளியேறக் கூடிய இந்த கெட்ட க்ளுகோஸானது சிறுநீரகங்களின் நுண்ணிய செல்களையும், சிறுநீரகங்களையும் பாதிக்கும். இந்த சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் பொழுதுதான்  ஆண்மைத் தன்மை கெடும், பெண்களுக்கு பெண்மைத் தன்மை பறிபோகக் கூடிய ஆரம்பம் இங்குதான்.

சிறுநீரகங்கள்  கெட்ட சக்திகளை மிக அதிகமாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது, அந்தக் கெட்ட கழிவுகளில் பெரும்பான்யானவைகள் சிறுநீரகங்களின் செல் அணுக்களில் தங்கி  விடுகின்றன. இதுதான் சிறுநீரகங்களின் செயல்திறனில் அவை உறுதியிழக்கும் காலகட்டமாகும்.

சிறுநீரகங்கள் உறுதியாக செயல்படும் போது, இரத்தமும் அதன் வழியாக சுற்று பெரும் அதே நேரம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலிருந்தும் அந்தக் கழிவுகளை எடுத்துக் கொண்டு அந்த சிறுநீரகங்களுக்கு வருகிறது. சிறுநீரகங்களின் முக்கியமான வேலை என்னவென்றால், ஒவ்வொரு அணுவிலிருந்து திரட்டிக் கொண்டு வரப்படும் அந்த இரத்தத்திலிருந்து உயிர்ச் சத்தைப் பிரித்து எடுக்கிறது. இந்த உயிர்ச் சத்துக்கள் ஆண் அணுவின் கருவாகவும்,, பெண் அணுவின் கருவாகவும், ஆண், பெண் இருவர் முறையே பிரித்தெடுக்கப்படுகின்றது. இவ்வதமாக, இரத்த ஓட்டத்திலிருந்து சிறுநீரகங்ககளால் பிரித்தெடுக்கப்பட்ட இந்த உயிர்ச் சத்துக்கள் ஆணுடைய விந்துபையை அடைகிறது. அவ்விதமாகவே, பெண்ணுடைய உயிர்ச் சத்தானது அதனுடைய சினைப்பையை அடைகிறது. அங்கு ஆண் அணுவாகவும், பெண் அணுவாகவும் முறையே உருவாகிறது. ஆக, எந்த அளவுக்கு சிறுநீரகங்கள் உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இரத்த ஓட்டத்திலிருந்து உயிர்ச் சக்தியானது பிரித்தெடுக்கப்படுகின்றது. இந்த அளவீட்டைப் பொறுத்துத்தான் ஆண் தன்மையும், பெண் தன்மையும், அளவு குறையும் பொழுது ஆண்மைக் குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படுகிறது.

கடுமையான உடற்பயிற்சி :
இன்று இளைஞர்கள் ‘ஜிம்’ போன்ற இடங்களுக்குச் சென்று கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடைய அட்ரீனலின் என்ற சுரப்பு நீர் மிக அதிகமாக தூண்டப்படுகிறது. இந்த சுரப்பிகளின் தூண்டுதலில் ஆண் தன்மையைக் கெடுக்கக் கூடிய ஹார்மோன்களும் வெகுவாக, அளவுக்கு மீறி சுரக்கின்றன. எனவே, இவர்களுடைய தசைகள் பெருத்து, கடின தன்மையை அடைகின்றன. எதிர்காலத்தில் இவர்களுடைய ஆண் தன்மை, பெண் தன்மை கேள்விக் குறியாக ஆகிவிடுகிறது. சாதரணமாக, ஆணுக்கு 60 வயது வரை ஆண் தன்மை நிலைத்திருக்கும், அதற்குப் பிறகு சற்று குறையலாம். அவ்விதமாகவே பெண்ணுக்கு 50 வயது வரை சாதரணமாக பெண் தன்மை நீடிக்கும், பின்னர் குறைந்து விடும். ஆனால், ‘ஜிம்’ போன்ற கடுமையான பயிற்சிகளைச் செய்யும் பொழுது, ஆண் தன்மையையும், பெண் தன்மையையும் கொடுக்கக்கூடிய ஹார்மோன்கள் வீணடிக்கபடுவதன் காரணமாக 35 முதல் 45 வயதுக்குள்ளாகவே அவர்களுடைய  வீரியம் குறைந்து போகும். பெண்ணாக இருப்பின் 4௦ வயது முடிவதற்குள்ளாகவே அவர்கள் இல்லற வாழ்க்கையில் இயலாதவர்களாக ஆகி விடுவார்கள்.

அட்ரீனலின் சுரப்பு நீர்::
அட்ரீனலின் என்ற சுரப்பு நீர் இதயம் மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது,, அதனைச் சுரப்பதற்காக அதனுடைய இயக்கத்தை துரிதப்பதுகிறது. அட்ரீனலின் சுரப்பு நீரின் இந்தச் செயல், மன அழுத்தத்தின் காரணமாக இதயம் நின்று விடுவதிலிருந்தும் கார்டிக் அரெஸ்டின் பாதுகாkகிறது. இவ்விதமாக அட்ரீனல் சுரப்பு நீர் உயிரைப் பாதுகாக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உயிரைப் பாதுக்காக்கும் பொறுப்பு அட்ரீனலின் என்ற ஹார்மோனுக்கு இருக்கிறது, இதை மிக அளவாகத் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறினால், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படும். அட்ரீனலின் சிறுநீரக கட்டுபாட்டில் தான் உள்ளது.  கர்ப்பப் பையும் சிறுநீரக கட்டுபாட்டில் உள்ளது. ஆகவே, அட்ரீனலின் மூலம் ஏற்படும் விளைவு நேரடியாக கர்ப்பப் பையில் விவரிக்க முடியாத கெடுதல்களை உருவாக்கிறது.  இதனால் கர்ப்பப் பையில் உள்ள இரத்த ஓட்டம் தடைப்படும், எனவே, கர்ப்பப் பைகளும் வலுவிழந்து பலவீனத்தின் காரணமாக அந்த உறுப்பின் சம்பந்தமான ஒவ்வொரு நோயும் கர்ப்பப் பையில் உருவாக நேரிடும். அதாவது, கர்ப்பப்பை எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். இது மாதப் போக்கை தள்ளிப் போக செய்கிறது.  மாதப் போக்கு ஏற்பட்டுவிட்டால், தொடர்ச்சியான இரத்தப் போக்கும் இதன் காரணமாகவே ஏற்படுகிறது. கர்ப்பம் தரிப்பதற்கு, உறுதியான கர்ப்பப் பையாக அது இருக்க வேண்டும். உள்ளே வளரும் குழந்தையும் உறுதியாக, கட்டுக் கோப்பாக இருக்க வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமான அட்ரீனலின் சுரப்பு நீரால் இதயம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கர்பப்பை தளர்ந்திருக்கும்போது உள்ளே வளரும் குழந்தையும் பொல பொலவென்று உறுதியில்லாமல் கட்டுகோப்பில்லாமல் பெருத்த உடம்பாக இருக்கும். எடை கூடுதலாகவும் இருக்கும். அந்தக் குழந்தை கருவிலும் ஆரோக்கியமாக இல்லை, பிறந்த பின்பும் ஆரோக்கியமாக இருக்காது.

அடுத்து, பிரசவத்தின் போது, கர்ப்பப் பை சுருங்க வேண்டும் இல்லையா? அப்பொழுதுதான் குழந்தை சுகப் பிரசவமாகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கர்ப்பப் பை இன்னும் விரிவாகி பிரசவத்தின் போது குழந்தையும் வெளிவராமல், கர்ப்பப் பையும் உள்ளேயே வெடித்து விடும் நிலைக்கு  தள்ளப்படும். பெரும்பாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப் பேற்றின் போது, சுகப் பிரசவம் ஆகுமா? ஆகாதா? என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்கதே.

மேற்க்கொண்டு நாம் ஜோதிட ரீதியாக எவ்வாறு இப்பிரச்சனையை தொடர்பு படுத்தி அணுகலாம். இங்கு, சம்பந்தப்படும் உறுப்புகள் -- சிறுநீரகங்கள், கர்ப்பப்பை, உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை, அட்ரீனலின் சுரப்பி, இனவிருத்தி ஹார்மோன்கள், ஆண், பெண் மலட்டுத்தன்மை முதலியவையாகும். கீழ்க்கண்ட முறையில் கிரகத்தையும், பாவத்தையும் இவ்வாறு பிரிக்க முடியும்.

இனவிருத்திக்கான ஹார்மோன்கள் –- சுக்ரன் மற்றும் 5ம் பாவம்
உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை  --  குரு மற்றும் 5ம் பாவம்
கர்பப்பை  -- குரு மற்றும் 7ம் பாவம்
சிறுநீரகங்கள், அட்ரீனலின் சுரப்பி   -- சனி மற்றும் 7ம் பாவம்

இனவிருத்திக்கான ஹார்மோன்களையும், காதல்/காம உணர்ச்சிகளையும், தாம்பத்ய சுகங்களையும் ஒருங்கே தன்னகத்தில் வைத்துள்ளது சுக்ரன். ஒருவர் மேற்க்கொண்ட கொடுப்பனையை நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால் சுக்ரன்  அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு. இதனால், இனவிருத்திக்கான ஹார்மோன்கள் பருவ வயதில் நன்கு அடித்தளமிட்டு வாலிப வயதில் முழுமையான முதிர்ச்சியுடன் குழந்தை பேற்றுக்குக்கான முழு உடல் தகுதி பெரும்.

மேலும், சுக்ரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமோ அதே அளவு  குருவுக்கும் நாம் கொடுக்க வேண்டும். உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை ஆகியவற்றிற்கு காரகம் குரு ஆகும். இவையும் பருவ வயதிற்க் கொண்டே நன்கு அமைய பெற குரு அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு. சுக்ரன், குரு ஒருவருக்கு நன்கு அமைய பெற்றால் ஆண், பெண், மலட்டுத்தன்மை என்கிற குறையை பெரும்பாலும் நிவர்த்திச் செய்யலாம்.

ஆனால், இன்றைய நவீன காலத்தில், ஆண், பெண் மலட்டுத்தன்மை, குழந்தையின்மைக்கு, , உயிரணுக்கள், விந்துப்பை, சினைமுட்டை,  கர்பப்பை மற்றும் இனவிருத்திக்கான ஹார்மோன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் சிறுநீரகங்களின் தன்மையும், அதன் செயல்பாட்டையும் மிக மிக கவனமாக கருத்தில் கொண்டு அதை நல்ல முறையில் பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், சிறுநீரகங்கள் தான் மேற்க் கூறியவற்றிற்க்காண ஆணிவேர். சிறுநீரகத்தை கெடுத்துக் கொண்டு ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கோ குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. சிறுநீரக கட்டுபாட்டில் உள்ள அட்ரீனலின் சுரப்பியை அளவோடு பயன்படுத்துவதற்கு நாம் நமது உடல் அறிவை சிறிதளவாவது வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சனி கிரகம், உடலிலுள்ள நச்சுப் பொருட்கள், தேவையற்ற சத்துக்கள் மற்றும் செயற்கையான வேதிப் பொருட்களை சிறுநீரகத்தின் உதவியோடு வெளியேற்றி உடலை சமநிலை தன்மையை உண்டாக்குகின்றது. உடலின் சமநிலைக்கு 7ம் பாவமும் பெரிதும் உதவி புரிகின்றது.  ஆகையால், ஒருவருக்கு சிறுநீரகம் நன்கு அமைய பெற அகம் சார்ந்த காரகங்களான ஒற்றைப் படை பாவங்கள் சிலவற்றை  (1,3,5,7,9,11) தொடர்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5,7 ம் பாவங்களை வலிமையாக தொடர்புக் கொண்டால் மிக்க சிறப்பு என்று கூறி இக்கட்டுரையை இனிதே முடிக்கிறேன்.





No comments:

Post a Comment