நம்முடைய உடலில் ஒரு
சத்துப் பற்றாக்குறை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக குறிப்பிட்ட
வைட்டமின் மாத்திரையை சாப்பிடுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். அதை
வெகுகாலத்துக்கும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது?? அதாவது ஒருவருக்கு உடலில் ஏதேனும் சத்து
பற்றாக்குறை இருந்தால் அந்த சத்தை நேரடியாக தான் ஈடுகட்ட வேண்டுமா?? அதாவது அந்த
பற்றாக்குறை சத்தை குறிப்பிட்ட உணவு மூலியமாகவோ அல்லது மாத்திரை மூலமாகத்தான்
நிறைவேற்ற வேண்டுமா என்ன?? ஒரு உதாரணம் மூலமாக விளக்கினால் அனைவருக்கும் புரியும்.
இங்கு ஒருவருக்கு கால்சியம்
குறைந்து போனால், கால்சியம் உள்ள உணவை நேரடியாக சாப்பிட்டுதான் அதைப் பெற
முடியுமா? இதுபற்றி அறிவியல் என்ன சொல்கிறது.
1940களில் பிரான்சில் வாழ்ந்த விஞ்ஞானி டாக்டர் லூயி கேர்வரான்
பாலை (MILK) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர், மனிதன்
கால்சியத்திற்காக பாலைப் பயன்படுத்துகிறான் என்றால், பால் தரும் மாடு கால்சியத்தை
எங்கிருந்து பெறுகிறது என்பதுதான் கேர்வரானின் கேள்வி.
மாடு தன்னுடைய உணவான
புல்லில் இருந்து மெக்னீசியத்தைத்தான் பெறுகிறது.
கால்சியத்தை நேரடியாகப் பெறுவதில்லை. மாட்டிற்கு என்று எந்த ஒரு
மருத்துவரும் கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதில்லை. ஆக, கால்சியத்தை உணவாக
சாப்பிடாத மாடு லிட்டர் லிட்டராக கால்சியத்தை உருவாக்கிறது. இது எப்படி சாத்தியம்?
இதுதான் உடலின் உருவாக்கம்!!! உயிர்ச்
சக்தியின் மகிமை!!!
தனக்குத் தேவையான
எல்லா வகை சத்துகளையும் உணவுகளில் இருந்து பெறும் சக்தி நம் உடலுக்கு
இருக்கிறது. மாடு மெக்னீசியத்தை
கால்சியமாக மாற்றி கொள்கிறது. கோழி தன்னுடைய உணவான மைக்காவில் இருந்து கால்சியத்தை
உருவாக்கி பெற்றுக் கொள்கிறது. எந்த உயிரினமும் சத்து தேவை என்று நேரடியாக
சத்துக்களை உண்பதில்லை. கிடைக்கிற உணவையே உடல் தன்
தேவைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது.
இப்படிதான் கால்சியமும்!!!
கால்சியம் சத்திற்காக பாலை நாம் குடிக்க
வேண்டியதில்லை. நம்முடைய உணவுகளில் உயிர்ச் சக்தி இருந்தால் போதும். அதுவே, எல்லா
வகை சத்துகளையும் உருவாக்கிக் கொள்ளும்.
உயிர்ச் சக்தி
என்றால் என்ன? அதிலிருந்து எப்படி சத்துக்கள் உருவாகும்.
இதை ஒரு உதாரணம்
மூலம் புரிந்துகொள்ளலாம். கோழி முட்டையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?
கால்சியம், புரதம், கார்போஹைட்ரெட், இன்னும் சில சத்துக்கள், இந்த முட்டையை அடை
வைத்தாலோ அல்லது இயந்திரத்தின் மூலம் வெப்பம் கொடுத்தாலோ என்ன நடக்கிறது? கோழி
முட்டையின் உள்ளே கோழிக்குஞ்சு உருவாகிறது.
சரி, அந்த குஞ்சி
இந்த உயிர்ச் சத்துக்களில் இருந்து உருவாகிறதா? அல்லது, உயிர்ச் சக்தியில் இருந்து
உருவாகிறதா? சத்துக்களில் இருந்து உருவாகிறது உண்மை என்றால், முட்டையில் உள்ள அதே
சத்துகளை வைத்து ஆய்வுக் கூடங்களில் கோழிக் குஞ்சிகளைத் தயாரித்திருக்க
முடியும். ஆனால், அப்படி முடிகிறதா?
எந்த உயிரும் சத்துக்களில் இருந்து
உருவாவதில்லை. உயிராற்றலில் இருந்துதான் உருவாகிறது. அதற்குப் பிறகு அந்த உயிர் தனக்குத் தேவையான சத்துக்களை
உடலின் உதவியோடு உற்பத்தி செய்து கொள்கிறது. எனவே, நம் உணவுகளில் உயிராற்றல்
இருப்பதுதான் முக்கியமே தவிர, சத்துக்கள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை.
உயிராற்றலில் இருந்து தேவையான சத்துக்கள் அனைத்தும் உருவாகும், நாம் தேடி தேடி
போய் சத்துகளை பெறவேண்டியதில்லை.
ஜோதிட ரீதியில் ஒருவருக்கு உயிர் சக்தி / உயிராற்றல்
முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் எப்படி
கொடுப்பினை அமைய வேண்டும்??
உயிர் சக்தி என்றால் என்ன?
புற உணர்ச்சிகளை உடலிற்கு
உணர்த்துவதற்காகவும், அவ்வுடலை பராமரிப்பதற்காகவும் தேவைப்படுகிற சக்தி தான் உயிர்
சக்தி யாகும், இது இருவகைப்படும். 1) அகஉயிர்சக்தி ; 2) புறஉயிர்சக்தி.
அகஉயிர்சக்தி : உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையாக
அமைந்துள்ள உயிரின் சுய-சக்தியாகும். இதை அதிகபடுத்தவோ, உருவாக்கவோ முடியாது. இதன்
இருப்பு தான் உடலின் இருப்பையும் தீர்மானிக்கும்.
புறஉயிர்சக்தி : இது உடலால் பஞ்சபூத மூலகங்களின் துணையோடு
உலகிலிருந்து பெறப்படுகின்ற சக்தியாகும். நம்முடைய அன்றாட இயக்கத்திற்கும்,
செரிமானம், பராமரிப்பு போன்ற இயக்கங்களுக்கும் தேவையான சக்தியை உடல் தன்
உறுப்புகளின் வழியாகப் பெறுகிறது. உணவு, நீர், காற்று.... போன்ற இயற்கையானவற்றிலிருந்து
உடல் புற உயிர்சக்தியைப் பெற்றுக் கொள்கிறது.
இங்கு அகஉயிர் சக்தி
நிலையானதால் ஒருவருக்கு லக்ன கொடுப்பினை
மிக இன்றியமையாகின்றது.
புறஉயிர்சக்தியை
நிலைநாட்ட செரிமானம், பராமரிப்பு, உடலின் சமநிலை போன்ற காரணிகள் தேவைப்படுவதால்
ஒருவருக்கு 6, 7 ஆம் பாவ கொடுப்பினைகள் உதவ வேண்டும்.
மேற்கூறிய பாவங்களோடு,
கிரக காரகத்தையும் நாம் இணைத்துப் பார்த்தால் புதன்
கிரகம் இங்கு நன்கு பொருந்தி வரும். அதாவது, ஒருவர் உண்ணுகிற உணவு எதுவாகினும்
நன்கு செரிக்கப்பட்டு, சத்துக்கள் உறிஞ்சப்பட்டு பிறகு அது இரத்தத்தில் முறையாக கலந்து பிறகு உடலுக்கு
தேவையான அணைத்து விதமான சத்துகளும் இயற்க்கையாகப் பெற்று பின் உடல் தன்னுடைய
தேவையை தானே பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் -- இயக்க சக்தி, செரிமான சக்தி,
பராமரிப்பு சக்தி ஆகிய மூன்றும் ஒரே கோட்டின் கிழ் சரி சதவிகித கலவையில் நன்கு
அமைய பெற வேண்டும். இந்த மூன்றும் மூளை மற்றும் நரம்பு மண்டல கட்டுபாட்டில் அமைய
பெற்றிக்கிறது.
செரிமான சக்தி
மட்டும் இயங்க சந்திரன் (சமைத்த உணவு), கேது (இரைப்பையில் உள்ள அமிலம்) ஆகிய
கிரகங்கள் போதும். ஆனால், இங்கு இயக்க சக்தியும், செரிமான சக்தியும் சேர்ந்து
இயங்க வேண்டுமென்றால் மூளையும், நரம்பு மண்டலமும் இங்கு
பிரதான அங்கம் வகிக்க வேண்டும்.
ஆகவே, புதன் கிரகத்தையும்,
6,
7 ஆம் பாவ கொடுப்பினைகளையும் பொருத்திப் பார்த்து பலனை
நிர்ணயிக்க வேண்டும்.
நாங்கள் “உயர் கணித சார” ஜோதிட அடிப்படையில் ஒருவரது ஜாதகத்தை
துல்லியமாக ஆராய்ந்து மருத்துவ ஜோதிட விளக்கமும், முறையான மருத்துவமும்
பார்க்கபடுகின்றது. மேலும் விவரங்களுக்கு,
கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்க என்று கூறி இக்கட்டுரையை முடிகின்றேன்.
wounderful thought provoking article for benefit of our society against common illution about disease
ReplyDeletewounderful thought provoking article for benefit of our society against common illution about disease
ReplyDeleteமேலும் மேலும் தொடரவும்
ReplyDeleteமேலும் மேலும் தொடரவும்
ReplyDelete